தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் என்ற அளவில் புதிதாக இந்நோய் உருவெடுத்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் 8 ஆயிரம் பேர் வெளியிடங்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களையும் அரசின் சிகிச்சை வளையத்திற்குள் கொண்டுவர முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Published:

