February 20, 2026, 11:17 AM
30 C
Chennai

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்கள்!

Perambalur Collector office - 2026

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தீக்குளிக்க முயன்ற 3 பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்!

பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர்ப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி லெட்சுமி, இவரது சகோதரி செல்வி (வயது 37), மற்றும் அண்ணி வசந்தா (வயது 40 ) ஆகிய மூவரூம் இன்று காலை பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்தனர்.

அவர்கள் தாங்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காத பெரம்பலூர் போலீசாரைக் கண்டித்து தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த பெண் போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

மேலும், அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், செங்குணத்தில் உள்ள அவரது நிலத்தின் பேரில், அவரது உறவினரான செங்குணத்தை சேர்ந்த தனபால் மகன் தமிழ்ச்செல்வன் என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் பெற்றாதாவும், பின்னர், வட்டி அசலுடன் திருப்பி செலுத்திய பின்னரும், பத்திரங்கள் வழங்காமல் இருப்பதாகவும், நிலத்திற்குள் அத்து மீறி நுழைந்து பயிர்களை சேதப் படுத்துவதாகவும் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தனர்.

அங்கிருந்த அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும், போலீசார் அவர்களை மீட்டு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories