விமானத்தில் பணிப்பெண்களிடம் குடிபோதையில் ரகளை செய்த வழக்கறிஞர்கள் உள்பட 3 பேர் கைது

Published:

 

சென்னைக்கு கோவையில் இருந்து நேற்று இரவு 10.45 மணிக்கு 130 பயணிகளுடன் தனியார் விமானம் புறப்பட தயாரானது.

அப்போது விமானபயணிகளில் 3 பேர் குடிபோதையில் விமான பணிப்பெண்களிடம் தகராறு செய்ததாகவும், 3 பேரும் விமான பணிப்பெண்களை செல்போனில் போட்டோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பணிப்பெண்கள் விமான அதிகாரிகளிடம் புகார் செய்தனர். உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள், செல்போனில் எடுத்த புகைப்படங்களை அழிக்குமாறு கூறினர். ஆனால் அதிகாரிகளிடமும் 3 பேரும் தகராறு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆய்வாளர் கோபி மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று 3 பேரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40), ராஜா (40), சுபாஷ் (32) என்று தெரிய வந்தது.

இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இவர்களில் சுபாஷ் இந்து மகாசபா இளைஞர் அணி நிர்வாகி ஆவார். செந்தில்குமாரும், ராஜாவும் வழக்கறிஞர்கள்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

இந்த சம்பவத்தால்விமானம் 1 மணி நேரம் தாமதமாக 11.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்றது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img