ஷீனா போரா வழக்க்கில் பீட்டர் முகர்ஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது சிபிஐ

 

மும்பையைச் சேர்ந்த இளம்பெண்  ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது தாயார் இந்திராணியின் மூன்றாவது கணவரான பீட்டர் முகர்ஜியை கைது செய்த சிபிஐ இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளது.

இளம்பெண் ஷீனா போரா (இந்திராணி முகர்ஜிக்கும், அவரது முதல் கணவருக்கும் பிறந்தவர் ஷீனா போரா).கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம் ராய் ஆகியோரை மும்பை காவல் துறையினர்

 கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிஐக்கு கடந்த செப்டம்பர் மாதம் மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிபிஐ கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஷீனா போராவின் மூன்றாவது கணவரும் தனியார் தொலைக்காட்சி நிறுவன முன்னாள் உயரதிகாரியுமான (தற்போதைய கணவர்), பீட்டர் முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

குற்றவாளிகளை பாதுகாக்க முயன்றக் குற்றத்துக்காக பீட்டர் முகர்ஜியை சிபிஐ போலீஸார் வியாழக்கிழமை திடீரென கைது செய்தனர். சிபிஐயின் இந்த நடவடிக்கை, இந்த வழக்கில் புதிய திருப்பமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் து சிபிஐ உயரதிகாரி ஒருவர் செய்தியாளரிடம் கூறியதாவது : –

இந்திராணி, சஞ்சீவ் கன்னா, ஷியாம் ராய் ஆகியோரிடம் தனித்தனியே நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலையில் பீட்டர் முகர்ஜிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே அவரைக் கைது செய்ய சிபிஐ முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் பீட்டர் முகர்ஜியை கைது செய்தனர். அவர் மும்பை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்படுவார் என அந்த அதிகாரி கூறினார்.

முன்னதாக, இந்திராணி முகர்ஜி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம் ராய் ஆகியோர் மீது 1,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மும்பை நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை தாக்கல் செய்தனர். அதில், அவர்கள் மூவரும் குற்றவாளிகள் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது என அந்த அதிகாரி கூறினார்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

Entertainment News

Popular Categories