காவல் நிலையத்தில் பெண் போலீஸ் அதிகாரியின் மடியில் அமர்ந்த தலைமைக் காவலர்

Published:

காவல் நிலையத்தில் பெண் போலீஸ் அதிகாரியின் மடியில் அமர்ந்த தலைமைக் காவலர் ஒருவர் அமர்ந்திருந்தது போன்ற இரண்டு புகைப்படங்கள் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி வருகிறது.

புகைப்படங்களுடன் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி வரும் தகவலில் கூறப்படுவதாவது :-

அந்த சம்பவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜவுரி மாவட்டத்தில் உள்ள புதால் காவல் நிலையத்தில் நடைபெற்றதாகவும் அந்த தலைமைக் காவலர் பெயர் ஜாகிர் உசேன் என்றும் கூறப்படுகின்றது.இதற்கு கண்டனங்களும் குவிந்து வருகிறதாம் .

பெண் போலீஸ் அதிகாரியின் மடியில் தலைமைக் காவலர் அமர்ந்ததை அருகில் பணியில் இருப்பதவர் இதனை கண்டுக்கொள்ளாமல் இருப்பதை பார்த்தால், இந்த நிகழ்வு பலமுறை நடந்திருக்கலாம் என்றும், அவர்கள் இருவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தனவாம் .

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இதுதொடர்பாக தங்கள் கவனத்திற்கு தெரிய வந்ததும், தலைமைக் காவலர் ஜாகிர் உசேனை பணியிடை நீக்கம் செய்துவிட்டதாகவும், டி.ஐ.ஜி. ஏ.கே.அத்ரி தெரிவித்துள்ளார். அதேபோல் பெண் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற வெட்கத்துக்குரிய செயலை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளதாக வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வரும் தகவலில் கூறப்படுகிறது

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img