December 5, 2025, 9:34 PM
26.6 C
Chennai

அதிமுக., கூட்டணி கிட்டத்தட்ட முடிவாயிடுச்சாமே!

modi-edappadi

அதிமுக-பாஜக கூட்டணி கிட்டதிட்ட முடிவானதாக தகவல் என்று, பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. இன்னும் சில நாட்களில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதற்குள் கூட்டணி குறித்து முடிவு செய்து கொள்ள பல கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப் படட்டும் அதன் பின்னர் கூட்டணி குறித்து பேசிக் கொள்ளலாம் என்று கடைசி வரை இழுத்தடித்து, கூட்டணி இல்லாமல் அதிமுக., பழைய பாணியில் தேர்தலை சந்திக்கவுள்ளது என்று ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் எதிர்த் தரப்பால் பரப்பப் பட்டது.

அதே நேரம், அதிமுக., தலைமையில் மெகா கூட்டணி அமைகிறது என்று ஒரு தகவல் பகிரப் பட்டு வந்தது. திமுக.,வில் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக., ஆகிய தோழமைக் கட்சிகளுக்கு எத்தகைய இடத்தை திமுக., வழங்கப் போகிறது என்பது தெரியாத நிலையில், பாமக., எதிர்த்தரப்பு கூட்டணியில் சேராது என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ஒரு தகவலைப் பரப்பி வருகின்றனர். அடுத்த கூட்டணியில் குழப்பம் நீடித்தால் போதும், தங்கள் கூட்டணி அமைவது அடுத்த பட்சம் என்று இரு தரப்புமே எண்ணுவதால், குழப்பமான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

இதனால்தான், வாட்ஸ்அப் சமூக வலைத்தள நிறுவனம் மிகவும் நொந்து போய், பொய்த் தகவல்களை அதிகம் பரப்புவது இந்தியக் கட்சிகள் தான் என்று கூறியது. அதற்கு ஏற்ப, கூலிக்கு வேலையாட்களை நியமித்து திமுக.,வினர் இத்தகைய பிரசாரங்களைச் செய்து வருவதாக குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர் அதிமுக.,வினர். திமுக., சமூக வலைத்தளப் பிரிவினருக்கு தீனி கொடுப்பது போல், அதிமுக.,வின் தம்பிதுரை அவ்வப்போது ஏதாவது கூறி, கூட்ட்ணிச் சிக்கல் நீடித்து வருவதாக சொல்லிக் கொண்டே இருக்கிறார். அவருக்கு உதவியாளராக ராமநாதபுரம் எம்பி., அன்வர் ராசாவும் வாய்திறந்து வருகிறார்.

இந்நிலையில், அதிமுக., கூட்டணி கிட்டத்தட்ட முடிவாகி விட்டது என்று ஒரு தகவல் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், அதிமுக – 20, பாஜக -12, தேமுதிக-4, பாமக -4 . (பாஜக வின் 12 இடங்களில் கொங்கு ஈஸ்வரன் 1 , புதிய தமிழகம் 1 , ஏ சி சண்முகம் 1 , என் ஆர் காங்கிரஸ் 1 – இவர்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் போட்டி) என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், பாமக.,வும் தேமுதிக.,வும் தங்களுக்கு 4 இடங்களா என்று தம் கட்டி வருகின்றனர். இதயத்தில் இடம் இருக்கிறது என்று கருணாநிதி பாணியில் இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு அதிமுக.,வில் இதயம் கனிந்தவர்கள் எவரும் இல்லை என்பதால், கூட்டணி முடிவானாலும் ஒதுக்கீடு பிரச்னையாகவே இருக்கும் என்கிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories