ஈ.வே.ரா., சிலை மீது செருப்பு வீச்சு: வழக்கறிஞர் கைது

Published:

evr statue - 2026
Pic: File Copy

சென்னை அண்ணா சாலையில் உள்ள சிம்சன் அருகே உள்ள ஈ.வே.ராமசாமி நாயக்கர் சிலை மீது செருப்பு வீசிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசனை போலிசார் கைது செய்தனர்.

ஆங்கிலேயருக்கு அணுக்கமான கொள்கைகளைக் கொண்ட அமைப்பாக துவங்கப்பட்ட திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்த ஈ.வே.ராமசாமி நாயக்கரின் 140-வது பிறந்த நாள் திங்கள் கிழமை இன்று கொண்டாடப்படுகிறது.

இதை அடுத்து, சென்னை, அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள ஈ.வே.ராமசாமி நாயக்கர் சிலைக்கு பல்வேறு கட்சிகளும் திரண்டு வந்து மாலை அணிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை அந்தப் பகுதிக்கு வந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசன் (35) என்பவர், திடீரென ஈ.வே.ராமசாமி நாயக்கர் சிலை மீது செருப்பை வீசினார். இதைக் கண்டு அங்கே கூடியிருந்த பகுத்தறிவுவாதிகளும் தி.க., தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

jagadesan1 serupppu - 2026

இதை அடுத்து, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசனை காவல்துறையினர் கைது செய்து, அவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

அரை நூற்றாண்டுக்கு முன்னர் ராமர் கடவுளா எனக் கேட்டு, அவரது உருவப் படத்துக்கு காலணி மாலை போட்டும், விநாயகர் உருவத்தை சாலையில் போட்டு உடைத்தும் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் ஏற்படுத்தியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்பது குறிப்பிடத் தக்கது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img