நெல்லையில் தேவை ஒரு விமான தளம், விமான நிலையம்!

air algeria - 2026

தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்றும் தொழில் துறையில் பிற மாவட்டங்களைப் போன்று இதுகாறும் முன்னேறவில்லை.

வெளிநாட்டு முதலீடுகளும் இம்மாவட்டங்களுக்கு வருவதில்லை. இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு முதலீட்டாளர் வசதியாக வந்து போவதற்கு பன்னாட்டு விமானதளம் அங்கே இல்லாததேயாகும்.

சென்னையை எடுத்துக்கொண்டால் பன்னாட்டு விமானதளம் இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாரளர்கள் புதிய புதிய தொழில்கள் தொடங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன்வருகின்றனர். அதனால் பல்வேறு ரக பன்னாட்டு தொழில்கள் அங்கு தொடங்கப்பட்டு அனேகர் பயன்பெறுகின்றனர். சென்னை பெருந்தொழில் நகரமாக உருவாகுவதற்கு முக்கிய காரணியாக இந்த பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருப்பதேயாகும்.

ஆனால் தென் மாவட்டங்களில் இத்துறையில் எவ்வித வளர்ச்சியும் காணப்படவில்லை. இருப்பினும் தொழில் நுட்பக் கல்வி நிலையங்கள் இங்கேதான் அதிகமாக உள்ளது. தொழில் நுட்ப வல்லுனர்களும் அதிக அளவில் இங்கே உருவாகி வந்தாலும் இவர்கள் அனைவரும் வேலைக்காக சென்னைக்குதான் படை எடுக்கின்றனர்.

ALSO READ:  தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

பன்னாட்டு விமானதளம் இல்லாதகுறையால் மட்டுமே பல்லாண்டுகளாக பேசப்பட்டு வருகின்ற “நாங்குநேரி தொழில்பூங்கா” மற்றும் “நாகர்கோவில் ரப்பர் பூங்காக்கள்” பூக்காமலும் காய்க்காமலும் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன.

ஆகையால் தென்மாவட்டங்களின் தொழில் மற்றும் வியாபார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இம்மூன்று மாவட்டங்களின் நடு நாயகமாக விளங்குகின்ற வள்ளியூரில் ஒரு பன்னாட்டு ஜம்போ விமானதளம் அமைக்க வேண்டும்.

பன்னாட்டு ஜம்போ விமான தளத்தக்கு நீளமான ஓடுதளம் தேவை என்பதால் இதை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் சிறிதளவு கூட இல்லை. வள்ளியூர்ப் பகுதியில் சமநிரப்பான தாரிசு நிலங்கள் எவ்வளவு தொலைவுக்கு வேண்டுமானாலும் கிடைக்கின்றன.

ஆகையால் இந்த பிரதேசம் பன்னாட்டு ஜம்போ விமானநிலையத்திற்கு மிகவும் பொருத்தமான இடமாகும். நீள ஓடுதளங்களை அமைப்பதற்கு இயற்க்கையாக சமநிரப்பு நிலம் இங்கே அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.

ஏனவே இதுகுறித்து நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினரும், திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர்களும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து மத்திய அரசை அணுகி இங்கே பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்தல் வேண்டும்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories