சென்னை அழியும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

earth graphic showing sea height during an el nino spl - 2026

சென்னை:
சென்னை அழிந்துவிடும் என்பது போன்ற வதந்திகளை எவரும் நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்து, வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போது இரண்டு செய்திகள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் படிப்போர் மனதில் பீதியை ஏற்படுத்தும் விதமாக பரவிக் கொண்டிருகிறது.
முதலாவதாக, சென்னையில் பெய்து வருவது வெறும் மழை அல்ல.. NASA ரிப்போர்ட் படி இதோட பெயர் “EL Nino” சுழற்சி புயல்.. கிட்ட தட்ட 250 Cm வரைக்கும் இந்த மழைபெய்ய வாய்ப்பு உண்டு.. சென்னையே முழுகிப்போக வாய்ப்பு உண்டு.. google ல Search பண்ணி பாருங்க தெரியும்..
எப்படியாவது நம் சென்னை மக்களுக்கு தெரியபடுத்துங்க… PLZ,,,, அரசாங்கம் இத பொருட்டா எடுத்துக்கல… என்பது முதலாவது வதந்தி. ..

உண்மையில் எல் நினோ என்பது தென் அமெரிக்கா பசுபிக் கடற்பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றம். பசுபிக் கடல் சற்றே சூடு அதிகமாகி அதன் காரணமாக தென் அமெரிக்கா, கலிபோர்னியா முதலிய இடங்களில் மழை பொழிவு ஏற்படும்.

எல் நினோ உலக வானிலையில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால் செயற்கை கோள்வழி அதனை கண்காணிக்க நாசா ஏற்பாடு செய்துள்ளது.

எல் நினோ தீவிரம் அடையும் ஆண்டுகளில் வங்காள விரிகுடாவின் கடல் நீர் வெப்பம் சற்றே உயரும். அதன் காரணமாக கூடுதல் நீராவி உயர்ந்து மழை கூடுதலாகும்.

1997 இல் உருவான தீவிர எல் நினோ போல இந்த ஆண்டும் தீவிரம் அடைந்து வருகிறது என நாசா வானிலை செயற்கை கோள்கள் கண்டுள்ளன.

இந்த ஆண்டும் இதன் தொடர்ச்சியாக 1997போல அமெரிக்கா பகுதிகளில் பெரு மழை பொழியும் என்றும்
வரும் 2016ஆம் ஆண்டு சராசரி வெப்பம் கூடுதல் கொண்ட ஆண்டாக இருக்கும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எல் நினோ ஒரு புயல் அல்ல; சென்னையை நோக்கி வராது; சென்னை அல்லது தமிழகம் குறித்து நாசா எந்த ஒரு முன்னறிவிப்பையும் வெளியிடவில்லை.

இரண்டாவதாக. …

Huzlers.com எனும் வலைத்தளம் விஷமத்தனமாக வேடிக்கை காட்ட பரப்பிய இந்த போலி செய்தி காட்டு தீ போல பரவி உலகெங்கும் பீதியை கிளப்பி வருகிறது. உண்மை காலில் செருப்பு போடுவதற்குள் பொய் ஒருமுறை உலகை சுற்றி வந்துவிடும் எனபதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

உண்மையில் சூரிய (காந்த) புயல் அவ்வப்போது ஏற்படும் என்பது மெய் தான். இந்த காந்த புயல் பூமியை வந்து “மோதும்”போது விண்வெளியில் சுற்றும் செயற்கை கோள்களின் தகவல் தொடர்பு முதலிய பாதிக்கப்படும்.
மிக தீவிர காந்த புயல் வீசினால் ஐரோப்பா முதலிய பகுதிகளில் குறிப்பாக துருவத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் மின்தொகுப்பு கருவிகள் – ட்ரான்ஸ்பார்மர்கள் – செயலிழந்து ஐரோப்பிய நகரங்கள் “இருளில் மூழ்கலாம்” அவ்வளவு தான்.

மின்சாரம் தடை பட மின்விளக்குகள் எரியாது. அவ்வளவு தான். இது தான் “உலகமே இருன்று விடும்” என்ற சொல்லின் மெய் அர்த்தம்.
மெய்யாக உலகமே பல நாட்கள் இருண்டு விடாது. போலி செய்தி தான் இது.

தகவல்: த.வி.வெங்கடேஸ்வரன், விஞ்ஞானி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories