வைகோ கைதால் பரபரப்பு! ஆளுநர் மாளிகை வரை அரக்க பரக்க… ஓட விட்டு…!

nakkeeran gopal - 2026

சென்னை: நக்கீரன் கோபாலை விடுதலை செய்ய வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு வைகோ தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வைகோ கைது செய்யப் பட்டார். இந்த விவகாரம் ஆளுநர் மாளிகை அரை அரக்க பரக்க விவாதிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை பார்க்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தாம் வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை பார்க்க முற்பட்டதாகவும், தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறி, அதனைக் கண்டித்து சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தின் முன்பு வைகோ தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரை வழக்கறிஞர் சந்திக்க அனுமதி மறுக்கக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்று என்பதை வைகோ கூற, அதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே போலீசார் மதிக்கவில்லை என்றும், இதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம் என்றும் வைகோ விவாதித்தார். தொடர்ந்து வைகோ அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

அதேநேரம், பத்திரிக்கையாளர்களும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நக்கீரன் கோபால் கைதை கண்டித்து முழக்கங்களும் எழுப்பினர். வைகோவை போலீசார் சமாதானப்படுத்த முயன்றபோதும், நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததால், போலீசார் அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.இதனால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் அருகே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ஆளுநர்  மாளிகையிலிருந்து புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆளுனரின் பணியில் ஒரு பத்திரிகையாளர் எவ்வாறு குறுக்கிட முடியும்? நக்கீரன் கோபால் எவ்வாறு குறுக்கிட்டார் என்பது தெரியவில்லை. அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டது குறித்து நக்கீரன் இதழ்களில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தது தான் கைதுக்கு காரணம் என்று ஊடகத்துறையினர் கூறுகின்றனர்.

இது உண்மை என்றால் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீது இதைவிட மோசமான தாக்குதலையும், அச்சுறுத்தலையும் கட்டவிழ்த்து விட முடியாது. ஒருவேளை ஆளுனர் குறித்து எழுதப் பட்ட தகவல்கள் தவறானதாக இருக்குமானால் அதற்காக அவதூறு வழக்கு தொடரலாம். அதற்கு மாறாக ஊடக ஆசிரியரை கைது செய்வது ஜனநாயகத்தை படுகொலை செய்யக்கூடிய, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கக்கூடிய செயலாகவே அமையும். இதை அனுமதிக்க முடியாது.

எனவே, நக்கீரன் கோபால் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை உடனே விடுதலை செய்ய வேண்டும்… என்று வேண்டுகோள் விடுத்தார்.

பாமக., நிறுவனர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன், திமுக., அதிமுக., காங்கிரஸ் என அனைத்து அரசியல்வாதிகளுமே அவரவர் அரசியல் பிரசாரத்துக்காகவும், அடுத்தவர் மீது அவதூறு பரப்பவும், அரசியல் காழ்ப்பு உணர்வை மக்களிடையே விதைக்கவுமே ஊடகங்களை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories