வைகோ கைதால் பரபரப்பு! ஆளுநர் மாளிகை வரை அரக்க பரக்க… ஓட விட்டு…!

nakkeeran gopal - 2026

சென்னை: நக்கீரன் கோபாலை விடுதலை செய்ய வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு வைகோ தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வைகோ கைது செய்யப் பட்டார். இந்த விவகாரம் ஆளுநர் மாளிகை அரை அரக்க பரக்க விவாதிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை பார்க்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தாம் வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை பார்க்க முற்பட்டதாகவும், தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறி, அதனைக் கண்டித்து சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தின் முன்பு வைகோ தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரை வழக்கறிஞர் சந்திக்க அனுமதி மறுக்கக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்று என்பதை வைகோ கூற, அதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே போலீசார் மதிக்கவில்லை என்றும், இதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம் என்றும் வைகோ விவாதித்தார். தொடர்ந்து வைகோ அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

அதேநேரம், பத்திரிக்கையாளர்களும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நக்கீரன் கோபால் கைதை கண்டித்து முழக்கங்களும் எழுப்பினர். வைகோவை போலீசார் சமாதானப்படுத்த முயன்றபோதும், நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததால், போலீசார் அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.இதனால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் அருகே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

இந்நிலையில் பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ஆளுநர்  மாளிகையிலிருந்து புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆளுனரின் பணியில் ஒரு பத்திரிகையாளர் எவ்வாறு குறுக்கிட முடியும்? நக்கீரன் கோபால் எவ்வாறு குறுக்கிட்டார் என்பது தெரியவில்லை. அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டது குறித்து நக்கீரன் இதழ்களில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தது தான் கைதுக்கு காரணம் என்று ஊடகத்துறையினர் கூறுகின்றனர்.

இது உண்மை என்றால் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீது இதைவிட மோசமான தாக்குதலையும், அச்சுறுத்தலையும் கட்டவிழ்த்து விட முடியாது. ஒருவேளை ஆளுனர் குறித்து எழுதப் பட்ட தகவல்கள் தவறானதாக இருக்குமானால் அதற்காக அவதூறு வழக்கு தொடரலாம். அதற்கு மாறாக ஊடக ஆசிரியரை கைது செய்வது ஜனநாயகத்தை படுகொலை செய்யக்கூடிய, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கக்கூடிய செயலாகவே அமையும். இதை அனுமதிக்க முடியாது.

எனவே, நக்கீரன் கோபால் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை உடனே விடுதலை செய்ய வேண்டும்… என்று வேண்டுகோள் விடுத்தார்.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

பாமக., நிறுவனர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன், திமுக., அதிமுக., காங்கிரஸ் என அனைத்து அரசியல்வாதிகளுமே அவரவர் அரசியல் பிரசாரத்துக்காகவும், அடுத்தவர் மீது அவதூறு பரப்பவும், அரசியல் காழ்ப்பு உணர்வை மக்களிடையே விதைக்கவுமே ஊடகங்களை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories