வீரிய மழை வருகிறது.. அடுத்த 2 நாட்களில்..!

rain forecast - 2026

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து வீரிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவு செய்துள்ள தகவல்…

மழை முன்னறிவிப்பு: கடந்த சில நாட்களாக நிலவி வந்த மந்தமான வானிலை இன்று முதல் முடிவுக்கு வருகிறது…அடுத்து வரும் ஒரு வார காலத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.. குறிப்பாக மழை குறைவாக பெய்த தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.. இந்த மழை பொதுவாக உள் மாவட்ட பகுதிகளில் சற்று வீரியம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது… அடுத்த இரு நாட்களுக்கு விட்டு விட்டு மழை இருக்கும்.. திங்கள் முதல் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது…

டெல்டா மாவட்ட பகுதிகளான தஞ்சை, திருவாரூர்,நாகை, மற்றும் இராமாதபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை, குமரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும்.. கன மழை வாய்ப்பு குறைவே. .

கொங்கு மண்டல பகுதிகள்: நல்ல மழைப் பொழிவு வரும் வாரத்தில் இருக்கும். குறிப்பாக நீலகிரி,வால்பாறை, திருப்பூர், அவினாசி, பெருந்துறை, சத்தியமங்கலம், சேலம், தருமபுரி பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருக்கும்… கோவை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது

நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.. ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வடக்கு மாவட்டங்கள்:கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், மாவட்ட பகுதிகளில் சற்று நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது…. பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும்..

சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்கள்: விட்டு விட்டு நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.. வரும் வாரத்தில் பெரும்பாலான பகுதகளில் நல்ல மழை இருக்கும்.

மத்திய மாவட்ட பகுதிகள்: திருச்சி, கரூர், தேனி உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய பகுதிகளில் மிதமான மழை இருக்கும்.

தென் மாவட்ட பகுதிகள்: மதுரை, சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளில் நல்ல மழையும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories