மீடூ புரட்சி; நாணயத்தின் மறுபக்கம்! #MeToo

Melania Trump interview Donald wife reveals feelings on alleged affair - 2026

மீடூ  என்ற இயக்கத்தில் உடன்பாடு இல்லை என்கிறார்கள் பலர். இதில் பலர் உடன்பட்டு உறவு வைத்துக் கொண்டு திடீரென்று புறட்சியாளர் ஆகிவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்!

சம்பவம் நடந்த காலத்தில் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்பதும்,  இன்று புகார் தெரிவிப்பவர்கள் யாரும் அதை நிரூபிக்கப் போவதில்லை என்றும், நிரூபிக்கும் தேவையும் இல்லை என்பதால் என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம் என்பதும் அவர்களின் வாதமாக இருக்கிறது!

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தும் சீசனை பயன்படுத்தி இதில் பலர் குளிர் காய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

மீடூ போன்ற மூவ்மென்ட்கள், பெண்களைக் கொச்சைப்படுத்தி விவாதப் பொருள் ஆக்குமே தவிர, இதனால் பெண்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும், அரசியல் ரீதியாக யாரை வேண்டுமானாலும் இவ்வாறு குற்றம் சாட்ட முடியும் என்பதும், பொய்ப் பிரசார இயக்கங்களுக்கு இது அல்வா சாப்பிடுவது மாதிரி என்பதும் சுட்டிக் காட்டப் படுகிறது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

ஆளுநரை சாய்ப்பதற்கு பாலியல் ரீதியான கருத்தியல் தாக்குதலைத் தொடுத்துள்ள அரசியல் கட்சிகள், அடுத்து இதே போல், #மீடூ போன்ற இயக்கங்களைப் பயன்படுத்தி, அடுத்துள்ள காய் நகர்த்தலை அரசியல் ரீதியாக முன்வைப்பர் என்று பலரும் எச்சரிக்கிறார்கள்!

இதனிடையே, இந்தக் கருத்துகளுக்கு வலு சேர்க்கும் வகையில் தனது கருத்தை முன்வைத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப்! முன்னரேயே கூட டிரம்ப் மீது இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுகளை சிலர் முன் வைத்தனர். அது பிரசாரக் களத்தில் பிரச்னையைக் கிளப்பியது!

இதை மனத்தில் கொண்டு தானோ என்னவோ, #MeToo மூலம் பாலியல் புகார் கூறுபவர்கள் வலுவான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும் என்று மெலனியா டிரம்ப் உறுதியிட்டுக் கூறுகிறார்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மெலானியா, கடந்த வாரம் கென்யாவில் ஏபிசி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”#மீடூ இயக்கப் பெண்களை நான் ஆதரிக்கிறேன். அவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும். அவர்களை நாம் அரவணைக்க வேண்டும். அதே நேரத்தில் புகார் கூறும் பெண்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும். நீங்கள் வெறுமனே, ‘நான் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டேன்’, ‘அவர் அதைச் செய்துவிட்டார்’ என்று கூறக் கூடாது. ஏனெனில் ஊடகங்கள் சில நேரங்களில் சில சம்பவங்களை அவர்களுக்கு ஏற்றவாறு சித்திரித்து விடுவர். அது சரியல்ல” என்று கூறியுள்ளார்.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories