December 5, 2025, 8:07 PM
26.7 C
Chennai

மீடூ புரட்சி; நாணயத்தின் மறுபக்கம்! #MeToo

Melania Trump interview Donald wife reveals feelings on alleged affair - 2025

மீடூ  என்ற இயக்கத்தில் உடன்பாடு இல்லை என்கிறார்கள் பலர். இதில் பலர் உடன்பட்டு உறவு வைத்துக் கொண்டு திடீரென்று புறட்சியாளர் ஆகிவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்!

சம்பவம் நடந்த காலத்தில் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்பதும்,  இன்று புகார் தெரிவிப்பவர்கள் யாரும் அதை நிரூபிக்கப் போவதில்லை என்றும், நிரூபிக்கும் தேவையும் இல்லை என்பதால் என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம் என்பதும் அவர்களின் வாதமாக இருக்கிறது!

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தும் சீசனை பயன்படுத்தி இதில் பலர் குளிர் காய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

மீடூ போன்ற மூவ்மென்ட்கள், பெண்களைக் கொச்சைப்படுத்தி விவாதப் பொருள் ஆக்குமே தவிர, இதனால் பெண்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும், அரசியல் ரீதியாக யாரை வேண்டுமானாலும் இவ்வாறு குற்றம் சாட்ட முடியும் என்பதும், பொய்ப் பிரசார இயக்கங்களுக்கு இது அல்வா சாப்பிடுவது மாதிரி என்பதும் சுட்டிக் காட்டப் படுகிறது.

ஆளுநரை சாய்ப்பதற்கு பாலியல் ரீதியான கருத்தியல் தாக்குதலைத் தொடுத்துள்ள அரசியல் கட்சிகள், அடுத்து இதே போல், #மீடூ போன்ற இயக்கங்களைப் பயன்படுத்தி, அடுத்துள்ள காய் நகர்த்தலை அரசியல் ரீதியாக முன்வைப்பர் என்று பலரும் எச்சரிக்கிறார்கள்!

இதனிடையே, இந்தக் கருத்துகளுக்கு வலு சேர்க்கும் வகையில் தனது கருத்தை முன்வைத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப்! முன்னரேயே கூட டிரம்ப் மீது இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுகளை சிலர் முன் வைத்தனர். அது பிரசாரக் களத்தில் பிரச்னையைக் கிளப்பியது!

இதை மனத்தில் கொண்டு தானோ என்னவோ, #MeToo மூலம் பாலியல் புகார் கூறுபவர்கள் வலுவான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும் என்று மெலனியா டிரம்ப் உறுதியிட்டுக் கூறுகிறார்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மெலானியா, கடந்த வாரம் கென்யாவில் ஏபிசி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”#மீடூ இயக்கப் பெண்களை நான் ஆதரிக்கிறேன். அவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும். அவர்களை நாம் அரவணைக்க வேண்டும். அதே நேரத்தில் புகார் கூறும் பெண்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும். நீங்கள் வெறுமனே, ‘நான் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டேன்’, ‘அவர் அதைச் செய்துவிட்டார்’ என்று கூறக் கூடாது. ஏனெனில் ஊடகங்கள் சில நேரங்களில் சில சம்பவங்களை அவர்களுக்கு ஏற்றவாறு சித்திரித்து விடுவர். அது சரியல்ல” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories