December 5, 2025, 1:52 PM
26.9 C
Chennai

லட்சக்கணக்கில் குவியும் மக்கள்; தாமிரபரணியில் புஷ்கர நீராடல் பெருவிழா கோலாகலம்!

maxresdefault 27 - 2025

தாமிரபரணி புஷ்கரம் இதுவரை எந்த அசம்பாவிதமும் இல்லாமல்… நல்ல முறையில் செல்கிறது. புஷ்கரம் நிறைவடைய இன்னும் இரு நாட்கள்தான் உள்ளன.

பாபநாசத்தில் மட்டும் வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை 9 லட்சம் பேர் குளித்ததாக போலீஸார் கணக்கு கூறினர். அனேகமாக ஒரு லட்சம் பேர் ஒரு நாளுக்கு என்ற சராசரியில் புனித நீராடி வருகின்றனர் பாபநாசத்தில்.

தாமிரபரணியில் சுமார் 143 படித்துறைகள் உள்ளன என்பதால், பரவலாக அனைத்து படித்துறைகளிலுமே பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். எனவே, எல்லா இடங்களிலுமே லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுகிறார்கள். படித்துறைகளில் நல்ல கூட்டம் கூடுகிறது.  குறிப்பாக, வட மாநில மக்களின் ஆர்வமும் கூட்டமும் மிக அதிகம்.

வரும் மக்களுக்கு நெல்லைவாசிகள் நன்கு வழி காட்டுகிறார்கள். தாமாக முன்வந்து உதவுகிறார்கள்… நெல்லை மக்களின் பாச மழையில் நனைந்த மற்ற ஊர் மக்கள் பெருமிதத்துடன் சொல்வதைக் காதில் கேட்ட முடிகிறது.

அரசுத் தரப்பில் இந்த விழா நடத்தப் படவில்லை, அறநிலையத்துறை பாராமுகத்துடன் கோட்டை விட்டது. மாவட்ட நிர்வாகம் நல்ல வாய்ப்பை இழந்துவிட்டது. ஆனால்…. பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப் பட்டுள்ளன. போலீஸார் முக்கிய தீர்த்தக் கட்டங்களில் சிறப்பாக பணி செய்கின்றனர். இருப்பினும், மிகப் பெரிய படித்துறையில் கூட, நீராடுவதற்கு என்று குறுகிய இடத்தை அமைத்துக் கொடுத்து, போலீஸார் நெருக்கடி காட்டுவது பலரிடம் முகத்தை சுளிக்க வைத்துள்ளது. நீராடுவதற்கு வரிசை கட்டி கம்புத் தட்டிகளுக்குள் அடைபட்டிருப்பதை நெல்லையில் குறுக்குத்துறை, தைப்பூச மண்டப படித்துறையில் மக்கள் விமர்சித்துச் செல்கின்றனர்.

அரசுத் தரப்பிலான ஏற்பாடுகள் இல்லாவிட்டாலும், தனிநபர்கள், மடாதிபதிகள், இந்து இயக்கங்களின் தொண்டர்களால் தாமிரபரணி மகாபுஷ்கரம் வரலாற்றில் பேசப்படும் அளவுக்கு சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. முக்கியமாக மாலை நேரங்களில் நடைபெறும் ஆரத்தி வழிபாட்டை பொதுமக்கள் பெரிய அளவில் திரண்டு, பார்த்து மகிழ்கின்றனர். உடன் சிலரும் பாடல்களைப் பாடியும் மகிழ்கின்றனர்.

தாமிரபரணி நதியும் இந்த பத்து நாட்களில் அமைதியாக, எந்த ஆக்ரோஷமும் இன்றி… பாபநாசம் தொடங்கி ஸ்ரீவை., வரைக்கும் இயல்பாகவே ஓடிவருகிறாள். பெரு மழை இல்லாததால்… வெள்ளம் இல்லை. எனவே நம் மாநிலத்தின் ஒரே வற்றாத ஜீவநதியான பரணித் தாய், தன்னை நோக்கி வந்தவர்களை அரவணைத்துக் காத்திருக்கிறாள்…

ஞாயிறு இன்று… பாபநாசம் தாமிரபரணி புஷ்கர விழாவில் புனித நீராட வந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

இதனிடையே, இன்று போடியைச் சேர்ந்தவர்களில் சிலர் ஆற்றில் நீராடியபோது, ஆற்றில் மூழ்கிய 2 பெண்கள் மற்றும் 2 ஆண்களை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

படித்துறைகளில் வலை போடப்பட்டு, மணல் மூட்டைகள் ஆங்காங்கே படிகளாய் அமைக்கப் பட்டுள்ளன. பாபநாசத்திலும், தைப்பூச மண்டபம் உள்ளிட்ட இன்னும் சில படித்துறைகளில் பாறைகள் அதிகம். எனவே மற்ற ஆறுகளைப் போல் நினைத்துக் கொண்டு… காவல்துறையினர் அனுமதித்துள்ள இடங்களைத் தவிர மற்ற பகுதிகளில் அசால்ட்டாக இறங்கி யாரும் நீராட முற்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்கள் காவல்துறையினர்!

வீடியோ… பாபநாசம் படித்துறையில் புனித நீராடக் குவிந்த மக்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories