லட்சக்கணக்கில் குவியும் மக்கள்; தாமிரபரணியில் புஷ்கர நீராடல் பெருவிழா கோலாகலம்!

maxresdefault 27 - 2026

தாமிரபரணி புஷ்கரம் இதுவரை எந்த அசம்பாவிதமும் இல்லாமல்… நல்ல முறையில் செல்கிறது. புஷ்கரம் நிறைவடைய இன்னும் இரு நாட்கள்தான் உள்ளன.

பாபநாசத்தில் மட்டும் வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை 9 லட்சம் பேர் குளித்ததாக போலீஸார் கணக்கு கூறினர். அனேகமாக ஒரு லட்சம் பேர் ஒரு நாளுக்கு என்ற சராசரியில் புனித நீராடி வருகின்றனர் பாபநாசத்தில்.

தாமிரபரணியில் சுமார் 143 படித்துறைகள் உள்ளன என்பதால், பரவலாக அனைத்து படித்துறைகளிலுமே பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். எனவே, எல்லா இடங்களிலுமே லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுகிறார்கள். படித்துறைகளில் நல்ல கூட்டம் கூடுகிறது.  குறிப்பாக, வட மாநில மக்களின் ஆர்வமும் கூட்டமும் மிக அதிகம்.

வரும் மக்களுக்கு நெல்லைவாசிகள் நன்கு வழி காட்டுகிறார்கள். தாமாக முன்வந்து உதவுகிறார்கள்… நெல்லை மக்களின் பாச மழையில் நனைந்த மற்ற ஊர் மக்கள் பெருமிதத்துடன் சொல்வதைக் காதில் கேட்ட முடிகிறது.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

அரசுத் தரப்பில் இந்த விழா நடத்தப் படவில்லை, அறநிலையத்துறை பாராமுகத்துடன் கோட்டை விட்டது. மாவட்ட நிர்வாகம் நல்ல வாய்ப்பை இழந்துவிட்டது. ஆனால்…. பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப் பட்டுள்ளன. போலீஸார் முக்கிய தீர்த்தக் கட்டங்களில் சிறப்பாக பணி செய்கின்றனர். இருப்பினும், மிகப் பெரிய படித்துறையில் கூட, நீராடுவதற்கு என்று குறுகிய இடத்தை அமைத்துக் கொடுத்து, போலீஸார் நெருக்கடி காட்டுவது பலரிடம் முகத்தை சுளிக்க வைத்துள்ளது. நீராடுவதற்கு வரிசை கட்டி கம்புத் தட்டிகளுக்குள் அடைபட்டிருப்பதை நெல்லையில் குறுக்குத்துறை, தைப்பூச மண்டப படித்துறையில் மக்கள் விமர்சித்துச் செல்கின்றனர்.

அரசுத் தரப்பிலான ஏற்பாடுகள் இல்லாவிட்டாலும், தனிநபர்கள், மடாதிபதிகள், இந்து இயக்கங்களின் தொண்டர்களால் தாமிரபரணி மகாபுஷ்கரம் வரலாற்றில் பேசப்படும் அளவுக்கு சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. முக்கியமாக மாலை நேரங்களில் நடைபெறும் ஆரத்தி வழிபாட்டை பொதுமக்கள் பெரிய அளவில் திரண்டு, பார்த்து மகிழ்கின்றனர். உடன் சிலரும் பாடல்களைப் பாடியும் மகிழ்கின்றனர்.

தாமிரபரணி நதியும் இந்த பத்து நாட்களில் அமைதியாக, எந்த ஆக்ரோஷமும் இன்றி… பாபநாசம் தொடங்கி ஸ்ரீவை., வரைக்கும் இயல்பாகவே ஓடிவருகிறாள். பெரு மழை இல்லாததால்… வெள்ளம் இல்லை. எனவே நம் மாநிலத்தின் ஒரே வற்றாத ஜீவநதியான பரணித் தாய், தன்னை நோக்கி வந்தவர்களை அரவணைத்துக் காத்திருக்கிறாள்…

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஞாயிறு இன்று… பாபநாசம் தாமிரபரணி புஷ்கர விழாவில் புனித நீராட வந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

இதனிடையே, இன்று போடியைச் சேர்ந்தவர்களில் சிலர் ஆற்றில் நீராடியபோது, ஆற்றில் மூழ்கிய 2 பெண்கள் மற்றும் 2 ஆண்களை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

படித்துறைகளில் வலை போடப்பட்டு, மணல் மூட்டைகள் ஆங்காங்கே படிகளாய் அமைக்கப் பட்டுள்ளன. பாபநாசத்திலும், தைப்பூச மண்டபம் உள்ளிட்ட இன்னும் சில படித்துறைகளில் பாறைகள் அதிகம். எனவே மற்ற ஆறுகளைப் போல் நினைத்துக் கொண்டு… காவல்துறையினர் அனுமதித்துள்ள இடங்களைத் தவிர மற்ற பகுதிகளில் அசால்ட்டாக இறங்கி யாரும் நீராட முற்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்கள் காவல்துறையினர்!

வீடியோ… பாபநாசம் படித்துறையில் புனித நீராடக் குவிந்த மக்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories