வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் : விஜயகாந்த்

Published:

 
 
தமிழகத்தில் பெய்த கன மழையின் காரணத்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
 
தமிழகத்தில் பெய்த கன மழையின் காரணத்தால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பலர் மனம் நொந்து போயுள்ளனர். நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கினால் மட்டும் பாதிப்பல்ல, நெற்கதிர் வரும் பருவத்தில் பெய்த கனமழையால், கதிர்களெல்லாம் பதராகமாறி விளைச்சலை பாதித்துள்ளதையும் அரசு பாதிப்பாக கருத வேண்டும். விவசாயத்துக்கு பாதிப்பில்லை என்பது போல் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.
 
டெல்டா மாவட்டங்களில் 1 ஏக்கர் நெல் சாகுபடிக்கு சுமார் ரூ.30 ஆயிரம் செலவாகிறது. ஆனால், செலவு செய்த பணத்தைக் கூட பெற முடியாத சூழல் தான் தற்போது நிலவுகிறது. கடலூரில் விவசாயம் செய்வதற்கு ஏற்றாற்போல் நிலத்தை சமன்படுத்தி வண்டல் மண் கொட்டி சீரமைப்பதற்கே ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் செலவாகும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
 
டெல்டா மாவட்டம், கடலூர் மாவட்டம், மற்றும் பாதிக்கப்பட்ட பிற மாவட்டங்களில், இதுபோன்ற பாதிப்புகளுக்கு தற்போது அதிமுக அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை ஒரு ஹெக்டேருக்கு 13 ஆயிரம் 500 ரூபாய் என்பது “யானைப் பசிக்கு, சோளப்பொறியாகத்தான்” உள்ளது.
 
விவசாய பயிர்களுக்கு அறிவித்துள்ள நிவாரணத்தொகை மிக்குறைவானதென்று பல இடங்களில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே விவசாயப் பயிர்களுக்கான நிவாரணத்தொகையை அதிமுக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.
 
மேலும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகளில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகின்றன இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். நிவாரண உதவிகளை வருவாய்த்துறையினர் மூலம் வழங்க வேண்டும் என விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img