திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Published:

thiruvattaru koil - 2026கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் அருள்பாலிக்கும் 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றான ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் பாராயணம், சுவாமி பவனி, கதைகளி ஆகியன நடைபெறும். இங்கு திருவிழா நாட்களில் கதைகளி பகவானுக்கு வழிபாடு என்ற வகையில் நடத்தப்படுகிறது.

எட்டாம் திருவிழாநாளான 12.ம் தேதி இரவு துரியோதன வதம் கதைகளி நடக்கிறது. ஒன்பதாம் திருவிழா நாளான 13.ம் தேதி சுவாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளலும், பத்தாம் திருவிழா நாளான 14.ம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி தளியல் ஆற்றில் ஆறாட்டுக்கு எழுந்தருளலும் நடைபெறுகிறது.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றதை அடுத்து பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

thiruvattaru function - 2026

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img