பட்டாசு வெடித்தலைத் தடுப்பதன் பின்னே… ஒரு மதவெறி அரசியல்…!

crackers - 2026

புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு… புகைப் பழக்கம் புற்றுநோய்க்கு வித்திடும்… –  இப்படி எச்சரிக்கை செய்து, சிகரெட்கள் விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது…!

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு- என்று சாராய வியாபாரிகளான மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்து, கேடெனத் தெரிந்தும், அட… தெரிந்தே உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

வருடம் முழுக்க எத்தனை பெண்களின் தாலியறுத்து இந்த அரக்கர்கள் தங்கள் கல்லா பொட்டியை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்..?!

நெடுஞ்சாலைக்கு பக்கத்துல டாஸ்மாக் இருக்கக் கூடாதுன்னு நீதிமன்றம் சொன்னா… கடையை எடுக்குறதுக்கு பதிலா… நெடுஞ்சாலையையே தூக்கிட்டு, கிராமத்து சாலையாக்கி நீதிமன்ற தீர்ப்பை நமுத்துப் போக செய்யிற அளவுக்கு மூளை வேலை செய்யிதுல்ல…

சிகரெட் புடிக்கக்கூடாதுன்னு எவ்ளோதான் இருந்தாலும், சிகரெட் புடிக்கிறதை ஒட்டுமொத்தமா நிறுத்தறதுக்கு வக்கில்லாம… ஒவ்வொரு வருடம் பட்ஜெட்லயும் சிகரெட்க்கு மட்டும் வரிய கூட்டிக்கிட்டே போயி.. அத ஒரு காஸ்ட்லி சமாசாரமா ஆக்கி… பலபேரோட பாக்கெட்டை நசுக்கி பிசுக்கி வாங்கி மத்திய அரசுக்கு கஜானாவ நிரப்பத் தெரியுலதுல்ல…!

சிகரெட் புடிக்காதீங்கன்னு உடல் நலத்துக்கு கேடுன்னு எவ்ளோ வெளம்பரம் கொடுக்கிறீங்க…?! டிவில., பேப்பர்ல..ன்னு! சினிமாவுல மது குடிக்காதீங்கன்னு எவ்ளோ தூரத்துக்கு சப் டைட்டில் கார்டு போட கத்திரிக்கோல வெச்சிட்டி நிக்கிறீங்க சென்சார்ல..?!

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

இது எதுனா பட்டாசு வெவகாரத்துல பண்ணினீங்களா?

போதைப் பாக்கு வெவகாரத்துல தமிழ்நாடே காறித் துப்புது.. மாநில அரசின் அமைச்சர்களையும், கூடவே போலீஸு கார தொரமார்களையும் ஐஜி டிஐஜின்னு சில ஜிக்களையும்! தடை போட்டது அரசாங்கம்… தடையை மீறி சப்ளைக்கு வழி சொல்லுறது அதே அரசாங்க அதிகாரிகளும் போலீஸும்…! அதாவது தடையைப் போட்டா, தடைமீறி வியாபாரம் செய்யவெச்சா முறைகேடா கல்லா கட்டலாம்னு செய்யிற சதித்திட்டம்…!

சரி…  சிகரெட், மது புட்டி பட்டியல் படி… பட்டாசு விவகாரத்தில் என்ன செய்திருக்கலாம்..?!!

வெடி வெடிப்பது சுற்றுச்சூழலுக்கு கேடு – அப்டின்னு வெடில பிரிண்ட் போட்டிருக்கலாம்!

வெடி வெடித்தல் சுற்றுச்சூழலை பாதிக்கும் – அப்டின்னு சினிமால வெடி வெடிக்கும் போது டைட்டில் கார்டு போடச் செய்திருக்கலாம்.. .

வெடி பொருள்களுக்கு கூடுதல் வரி விதிச்சி… வியாபார அளவை கட்டுப் படுத்தியிருக்கலாம்…

சீன வெடி பொருள்களுக்கு முற்றிலும் தடை விதிக்கலாம்…

வெடி வியாபாரத்தை கட்டுப்படுத்தி.. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கும்னு மட்டுப் படுத்தியிருக்கலாம்…

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

மீடியாக்கள்ல விளம்பரம் கொடுத்து, பட்டாசு வெடித்தலால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து கருத்து இயக்கங்கள் நடத்தியிருக்கலாம்!

ஆனால்… இவை எதையுமே செய்யல…! நேரா… நீதிமன்ற தடங்கல்கள் தான்! பட்டாசு தயாரிப்பு தமிழ்நாட்ல மட்டுமே அதிகம்… குறிப்பா சிவகாசி! அதுவும் நாடார்கள் தொழில்! இதுவே குஜராத்திகாரன், மார்வாடிகள் தயாரிப்பு தொழிலா இருந்தா.. இப்படி ஒரு தீர்ப்ப உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்குமாங்கிறது சந்தேகம்தான்! மொதல்ல இப்படி ஒரு கேஸை சுற்றுச்சூழல்னு சொல்லி இந்த ராட்சசனுங்க போட்டிருப்பாங்களாங்கிறது சந்தேகம்தான்!

கேஸ் போட்டவர், வழக்குல வாதாடுனவன், மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் – அதை செயல்படுத்த ஆர்வமா இருக்குற தமிழக அரசு குறிப்பா 6 மாசம் சிறைன்னு சொல்லி அறிக்கை கொடுக்குற வெளக்கெண்ணெய்கள்… எல்லாருக்குமே ஒரே ஒரு நோக்கம்தான் இருக்கு!

இவங்க யாருமே சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து அக்கறை காட்டவே இல்ல…!

தொடக்கப் பள்ளியிலேருந்து, நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளின்னு கடந்த கால் நூற்றாண்டா… கிறிஸ்துவ மிஷனடி பள்ளிகள்ல ‘பட்டாசு வெடிக்க மாட்டோம்’னு பள்ளிக்கூடப் பிள்ளைங்கள சபதம் எடுக்க வெச்சி…

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை நாசமாக்க, அதுல இருக்கற இந்து ஆன்மிக தொடர்பை அறுத்துப் போகச் செய்யிறதுக்காக மேற்கொள்ளப் பட்ட முயற்சி…

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

மூன்றாம் ஆயிரமாவது ஆண்டை ஆசிய அறுவடை குறிப்பாக இந்திய அறுவடைன்னு ஒரு போப்பு இங்கே வந்து அறைகூவல் விட்டுட்டுப் போறார்னா…

அதை செயல்படுத்த இத்தன பேரு வரிந்து கட்டிக்கிட்டு வேலை செய்யிறாங்கன்னா…

இவங்களுக்கு தக்க பதிலடிகொடுக்குறா மாதிரி… நாம் சபதம் ஏற்கும் நாளாக இந்த தீபாவளி திருநாள மாத்திக் காட்டணும்!

வெடி வெடிக்கிறது ஒரு நாள் கூத்து.! சிகரெட்டும், தண்ணியும் பான்பராக் போதைப் பாக்கும் நாள் முழுக்கன்னு எடுத்துக் காட்டியிருக்க வேணாம்..!?

வருடம் முழுக்க செய்யிற தப்புக்கெல்லாம் எச்சரிக்கை மட்டும் போடுவாங்களாம்… ஒரு நாள் கூத்துக்கு தடை போடுவாய்ங்களாம்..! நிலவரத்தை சின்னப் புள்ளைங்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வையுங்க….!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories