காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 71): அரசின் பாதுகாப்பில் வாழ்ந்தவர்கள்!

karkare - 2026விஷ்ணு கார்கரே கடும் உழைப்பாளி என்பதையும்,வாழ்க்கையில் கஷ்டப்பட்டு சமூகத்தில் மரியதைக்குரிய ஒரு நிலைக்கு வந்தவர் என்றும் ஏற்கெனவே பார்த்தோம். அவர் எண்ணியிருந்தால்,தன்னுடைய வியாபாரத்தை விரிவாக்கம் செய்துக் கொண்டே போயிருக்கலாம்,நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டே இருந்திருக்கலாம்.

ஆனால் ஒரு நிலைக்கு வந்ததும் ,இது போதுமென்று என்று எண்ணினார். இனி தன் உழைப்பை,தேசத்திற்காக,தன் மதத்திற்காக,சமூகத்திற்காக கொடுக்க வேண்டும் என்று முடிவுசெய்து அதன்படி நடக்கவும் செய்தார்.

தன்னுடைய டெக்கான் விருந்தினர் விடுதிக்கு ஒரு மேலாளரை நியமித்து,அவர் மூலம் நடத்தி வந்தார். விடுதியின் மூலம் நல்ல லாபமும் கிடைத்து வந்தது.

நவ்காளியிலிருந்து திரும்பிய பின்பு, ஆப்தேயின் அழைப்பின் பேரில்,வாரம் ஒரு முறையேனும் பூனா வந்து அவரைச் சந்தித்து பேசுவார்;ஆப்தேயுடன் பலமுறை பம்பாய் சென்று வந்தார்.

ஆனாலும் அவர் தொடர்ந்து அஹமத் நகரிலேயே வசித்து வந்தார். தன்னுடைய டெக்கான் விருந்தினர் விடுதியை மேற்பார்வையிடுவது,ஹிந்து மஹா சபா அலுவலகத்தை பார்த்துக் கொள்வது எனும் பணிகளை செய்து வந்தார்.

ஆனால் இந்த அன்றாட பணிகளில் அவருக்கு அதிக ஆர்வம் இல்லை.

இந்த நேரத்தில்… பாகிஸ்தானிலிருந்து சொந்த நாட்டிற்கே அகதிகளாய் திரும்பியவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினர் அஹமத் நகர் வந்து சேர்ந்தனர்.

‘அகதிகளுக்கான நிவாரணப் பணி ‘ இப்போது கார்கரேயை ஈர்த்தது.அதில் முழு மூச்சில் ஈடுபடத் தொடங்கினார். இந்த வேலையில் கார்கரேயோடு சேர்ந்து பணியாற்றிய கனாஷ்யாம் கில்டா ( GHANASHYAM GILDA ) கூற்றின்படி,

அகதிகள் அஹமத்நகர் வரத் தொடங்கிய போது,அரசாங்கம்அவர்களுக்கான எந்தவொரு அடிப்படை ஏற்பாட்டினையும் கூட செய்யவில்லை. அவர்களை ரயில் பெட்டிகளுக்கு அருகே விட்டு விட்டுச் சென்று விட்டது.

இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால் குப்பைக்கூளங்களைப் கொட்டுவது போல கொட்டி விட்டுச் சென்று விட்டது. ‘’ நீங்கள் எப்படியோ பிழைத்துபோங்கள் ‘’ எனும் மனோபாவமே தொனித்தது.ஏனென்றால் அவர்களைப் பற்றி பிறகு மறந்தே போனது.

கனாஷ்யாம் கில்டா, தனக்கு தெரிந்தவர்களிடமிருந்து சில லாரிகளை வரவழைத்து, அகதிகளை நகரத்திற்குள் ஏற்றி வந்து,அவர்கள் தங்குவதற்கு இடத்தையும் பார்த்து ,தகரத்தாலான கூரைகளையும் செய்வித்து அங்கு தங்க வைத்தார்.

ஆனால், அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது மிகவும் கடினமான பணியாக இருந்தது. கார்கரே அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

கனாஷ்யாம் கில்டா அகதிகளை நகரத்திற்குள்,லாரிகளில் ஏற்றி வருவார். கார்கரே, அவர்களுக்கு தன்னுடைய ஹோட்டலில் உணவளிப்பார். சில நாட்கள் சென்ற பிறகு,கார்கரே ராணுவத்தினரிடமிருந்து கூடாரங்களை பெற்று அவற்றை பயன் பாட்டிற்கு தயாரும் செய்தார்.

ஏறக்குறைய ஒரு மாதக் காலத்திற்கு,அதாவது அரசாங்கம் ‘ விஸாப்பூர் ‘ அகதிகள் முகாமை உருவாக்கும் வரையில்,கார்கரே எப்படியும் 30000 பேருக்கான உணவு ஏற்பாட்டையாவது செய்திருப்பார்.

இந்த ‘ விஸாப்பூர் முகாம் ‘ அஹமத்நகரிலிருந்து 26 மைல்கள் தூரத்தில் அமைந்திருந்தது. இதனை கிட்டத்தட்ட ஒரு புறக்கணிக்கப்பட்ட சிறையென்றே சொல்லலாம். அதில் 10,000 அகதிகளுக்கு குறைவில்லாமல் ‘ அடைக்கப் பட்டிருந்தனர்’.

அதிகாரப்பூர்வமான தகவலின்படி, அந்த அகதிகள் கடும் கோபத்தில் இருந்தனர்.  டெல்லியைப் போலவே இங்கேயும் கூட முஸ்லீம்கள், தங்கள் சொத்துக்களைப் பார்த்துக் கொண்டு,தொழிலினை செய்துக் கொண்டு,அரசியலில் ஈடுபட்டுக் கொண்டு, ‘ அரசாங்கம் முழு பாதுகாப்பளிக்க ‘ சுகமாக வாழ்ந்து வந்தனர்.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories