காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 71): அரசின் பாதுகாப்பில் வாழ்ந்தவர்கள்!

karkare - 2026விஷ்ணு கார்கரே கடும் உழைப்பாளி என்பதையும்,வாழ்க்கையில் கஷ்டப்பட்டு சமூகத்தில் மரியதைக்குரிய ஒரு நிலைக்கு வந்தவர் என்றும் ஏற்கெனவே பார்த்தோம். அவர் எண்ணியிருந்தால்,தன்னுடைய வியாபாரத்தை விரிவாக்கம் செய்துக் கொண்டே போயிருக்கலாம்,நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டே இருந்திருக்கலாம்.

ஆனால் ஒரு நிலைக்கு வந்ததும் ,இது போதுமென்று என்று எண்ணினார். இனி தன் உழைப்பை,தேசத்திற்காக,தன் மதத்திற்காக,சமூகத்திற்காக கொடுக்க வேண்டும் என்று முடிவுசெய்து அதன்படி நடக்கவும் செய்தார்.

தன்னுடைய டெக்கான் விருந்தினர் விடுதிக்கு ஒரு மேலாளரை நியமித்து,அவர் மூலம் நடத்தி வந்தார். விடுதியின் மூலம் நல்ல லாபமும் கிடைத்து வந்தது.

நவ்காளியிலிருந்து திரும்பிய பின்பு, ஆப்தேயின் அழைப்பின் பேரில்,வாரம் ஒரு முறையேனும் பூனா வந்து அவரைச் சந்தித்து பேசுவார்;ஆப்தேயுடன் பலமுறை பம்பாய் சென்று வந்தார்.

ஆனாலும் அவர் தொடர்ந்து அஹமத் நகரிலேயே வசித்து வந்தார். தன்னுடைய டெக்கான் விருந்தினர் விடுதியை மேற்பார்வையிடுவது,ஹிந்து மஹா சபா அலுவலகத்தை பார்த்துக் கொள்வது எனும் பணிகளை செய்து வந்தார்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

ஆனால் இந்த அன்றாட பணிகளில் அவருக்கு அதிக ஆர்வம் இல்லை.

இந்த நேரத்தில்… பாகிஸ்தானிலிருந்து சொந்த நாட்டிற்கே அகதிகளாய் திரும்பியவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினர் அஹமத் நகர் வந்து சேர்ந்தனர்.

‘அகதிகளுக்கான நிவாரணப் பணி ‘ இப்போது கார்கரேயை ஈர்த்தது.அதில் முழு மூச்சில் ஈடுபடத் தொடங்கினார். இந்த வேலையில் கார்கரேயோடு சேர்ந்து பணியாற்றிய கனாஷ்யாம் கில்டா ( GHANASHYAM GILDA ) கூற்றின்படி,

அகதிகள் அஹமத்நகர் வரத் தொடங்கிய போது,அரசாங்கம்அவர்களுக்கான எந்தவொரு அடிப்படை ஏற்பாட்டினையும் கூட செய்யவில்லை. அவர்களை ரயில் பெட்டிகளுக்கு அருகே விட்டு விட்டுச் சென்று விட்டது.

இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால் குப்பைக்கூளங்களைப் கொட்டுவது போல கொட்டி விட்டுச் சென்று விட்டது. ‘’ நீங்கள் எப்படியோ பிழைத்துபோங்கள் ‘’ எனும் மனோபாவமே தொனித்தது.ஏனென்றால் அவர்களைப் பற்றி பிறகு மறந்தே போனது.

கனாஷ்யாம் கில்டா, தனக்கு தெரிந்தவர்களிடமிருந்து சில லாரிகளை வரவழைத்து, அகதிகளை நகரத்திற்குள் ஏற்றி வந்து,அவர்கள் தங்குவதற்கு இடத்தையும் பார்த்து ,தகரத்தாலான கூரைகளையும் செய்வித்து அங்கு தங்க வைத்தார்.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

ஆனால், அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது மிகவும் கடினமான பணியாக இருந்தது. கார்கரே அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

கனாஷ்யாம் கில்டா அகதிகளை நகரத்திற்குள்,லாரிகளில் ஏற்றி வருவார். கார்கரே, அவர்களுக்கு தன்னுடைய ஹோட்டலில் உணவளிப்பார். சில நாட்கள் சென்ற பிறகு,கார்கரே ராணுவத்தினரிடமிருந்து கூடாரங்களை பெற்று அவற்றை பயன் பாட்டிற்கு தயாரும் செய்தார்.

ஏறக்குறைய ஒரு மாதக் காலத்திற்கு,அதாவது அரசாங்கம் ‘ விஸாப்பூர் ‘ அகதிகள் முகாமை உருவாக்கும் வரையில்,கார்கரே எப்படியும் 30000 பேருக்கான உணவு ஏற்பாட்டையாவது செய்திருப்பார்.

இந்த ‘ விஸாப்பூர் முகாம் ‘ அஹமத்நகரிலிருந்து 26 மைல்கள் தூரத்தில் அமைந்திருந்தது. இதனை கிட்டத்தட்ட ஒரு புறக்கணிக்கப்பட்ட சிறையென்றே சொல்லலாம். அதில் 10,000 அகதிகளுக்கு குறைவில்லாமல் ‘ அடைக்கப் பட்டிருந்தனர்’.

அதிகாரப்பூர்வமான தகவலின்படி, அந்த அகதிகள் கடும் கோபத்தில் இருந்தனர்.  டெல்லியைப் போலவே இங்கேயும் கூட முஸ்லீம்கள், தங்கள் சொத்துக்களைப் பார்த்துக் கொண்டு,தொழிலினை செய்துக் கொண்டு,அரசியலில் ஈடுபட்டுக் கொண்டு, ‘ அரசாங்கம் முழு பாதுகாப்பளிக்க ‘ சுகமாக வாழ்ந்து வந்தனர்.

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories