கைலி கட்டி கர்நாடிக் ஸாங்… கர்நாடிக் மியூசிக்கில் கிறிஸ்து அல்லா! டி.எம்.கிருஷ்ணாவின் தில்லி இசை நிகழ்ச்சி ரத்து!

t-m-krishna
புது தில்லி: கர்நாடக சங்கீத இசை ரசிகர்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக, கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் தில்லி இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டி.எம்.கிருஷ்ணா. கர்நாடக இசை கலைஞரான இவர், கச்சேரிகள் பல செய்தவர். ஃபியூஷன் மியூசிக் என்று, மேற்கத்திய கர்நாடக இசைகளைக் கோத்து ஜிம்மிக்ஸ் செய்தவர். இசையில் கலப்பை ஜீரணிக்க முடியாமல் ஏதோ ஏற்றுக் கொண்ட பாரம்பரிய கர்நாடக இசை ரசிகர்கள், கர்நாடக இசையில் மதக் கலப்பை சகிக்க முடியாமல் குமுறித் தள்ளினார்கள்.

அண்மையில், கிறிஸ்துவ மதமாற்ற பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக ஓ.எஸ். அருண் அறிவித்தார். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து அவர் அந்த மதமாற்ற நிகழ்ச்சியில் போய் பாடுவதை ரத்து செய்தார்.

தொடர்ந்து, கர்நாடக இசையில் கிறிஸ்துவ பாடல்களை சில கர்நாடக கலைஞர்கள் பாடியதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது டி.எம்.கிருஷ்ணா, தாம் மாதம்தோறும் ஏசு கிறிஸ்து மற்றும் அல்லா குறித்து கர்நாடக இசையில் பாடல்களை வெளியிடுவேன் என டுவிட்டரில் தெரிவித்தார்.

இது பாரம்பரிய கர்நாடக ரசிகர்களை, இந்து மதத்தின் மீது பற்று கொண்டிருக்கும் பலரை கோபமும் வருத்தமும் அடையச் செய்தது. இத்தனை நாட்களாக மேடையேற்றி அழகு பார்த்து, இசையை ரசித்து ஆதரவு அளித்து வந்த நிலையில், தம் அபிமான பாடகர் இவ்வாறு மத விரோதச் செயல்களில் ஈடுபடுவது கண்டு டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் பலர்.

tmkrishna

தொடர்ந்து, கர்நாடக கச்சேரி மேடையில் பாரம்பரிய வேஷ்டி சட்டை, ஜிப்பா அணிந்துதான் பாட வேண்டுமா? கைலி கட்டிக் கொண்டு பாடினால் காத்துதான் வருமா பாட்டு வராதா என்று கோணங்கித் தனம் செய்தார் டிஎம்.கிருஷ்ணா. இப்படிப்பட்ட நிகழ்வுகள், இசை ரசிகர்களை கோபமூட்டின.

இதனிடையே, தில்லியில், நவ.17, 18ஆம் தேதிகளில் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட சில கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டில்லி நேரு பூங்காவில் நடக்க இருந்த இந்த நிகழ்ச்சிக்கு இந்திய விமான நிலையங்களின் ஆணையமான ஏ.ஏ.ஐ., ஏற்பாடு செய்திருந்தது.

ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு, சமூக வலை தளங்களில்  கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக ஏ.ஏ.ஐ., அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த நிகழ்ச்சியை எப்படியாவது நடத்தலாம் என தில்லி அரசு முயற்சி செய்து வருகிறது.

டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், பாரம்பரிய கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்பும் ரசிகர்கள் மற்றும் இந்து அமைப்புகள் என்பதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கில், பாரம்பரிய பாரதீய கலாசார சிதைவுப் பணிகளையே கொள்கையாகக் கொண்டுள்ள கம்யூனிஸ இயக்கங்கள், டி.எம்.கிருஷ்ணாவுக்கு கைகொடுத்துள்ளன. டிவிட்டரில் பெரும் போரே நடத்தும் அளவுக்கு, இந்து அமைப்புகள், மற்றும் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த விஐபி.,க்கள், எழுத்தாளர்கள் என பலரும் களம் இறங்கியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories