புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் 16ந்தேதி காலை கஜா புயல் தாக்கியதில் பலன் தரும் மரங்கள் சாய்ந்தது.அறந்தாங்கி அருகே பிள்ளைவயல் உட்பட சிலட்டுர்,தாந்தாணி,ஆவணத்தாங்கோட்டை,பெரியாளுர்,பூவற்றக்குடி,நாட்டுமங்கலம் குருந்திரக்கோட்டை மன்னகுடி பிடாரிகாடு அரசர்குளம் ஆயிங்குடி உட்பட பல கிராமங்களில் வாழைத்தோட்டம் தென்னந்தோப்பு ஆகிய தோப்புகளிலும் தனித்தோப்பாகவும் வளர்த்து வந்த தேக்கு மரங்கள் கஜா புயல் காரணமாக வேருடன் சாய்ந்து முறிந்து அழிந்து வி்ட்டது இதை வளர்த்து வந்த விவசாயிகள் செய்வதறியாது கலக்கமும் கவலையும் அடைந்துள்ளனர்
அறந்தாங்கி அருகே பிள்ளைவயல் கிராமத்தில் பலன் தரக்கூடிய தேக்கு மரம் கஜா புயலால் சாய்ந்தது
Popular Categories



