சென்னையில் 11 இடங்களில் காவிக் கொடி ஆர்ப்பாட்டம்! அயோத்தியில் ராமர் ஆலயம் எழும்பிட வலியுறுத்தல்!

hindumunnaiposter - 2026

6.12.2018 இன்று காலை 10.30 மணி அளவில் இந்து முன்னணி சென்னை மாநகரம் சார்பில், அண்ணாநகர், டவுடன் சிக்னல், ராயபேட்டை மணிகூண்டு, கோயம்பேடு, போரூர் ரவுண்டானா, மணலி மார்க்கெட், கொருக்குப்பேட்டை கே.என்.எஸ். டிப்போ, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரில், கொளத்தூர் மூகாம்பிகை சிக்னல், மூலக்கடை மேம்பாலம் அருகில், திருவொற்றியூர் சுனாமி குடியிருப்ப ஆகிய 11 இடங்களில் காவிக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அயோத்தியாவில் கோயில் கட்ட உள்ள இடர்பாடுகள் நீங்க பிரார்த்தனை செய்து 108 தேங்காய் உடைக்கப்பட்டது. போரூர், ராயபுரம், டவுட்டன், மணலி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தக் காவிக் கொடி ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மாநில செயலாளர் த.மனோகர், மாநகர தலைவர்ஏ.டி. இளங்கோவன், மாநகரத் துணைத் தலைவர் எஸ்.எஸ். முருகேசன், மாநகர செயலாளர் கள் மாதவரம் செல்வகுமார், சிவ. விஜயன், மாநகர செய்தித் தொடர்பாளர் பசுத்தாய் கணேசன், மாநகர செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் மற்றும் மாவட்ட, தொகுதி, வட்டப் பொறுப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தபோது, டிசம்பர் 6, அயோத்தியில் அவமானச் சின்னம் அகற்றப்பட்ட நாள். ராமஜென்ம பூமி வழக்கு 70 ஆண்டுகளுக்கு மேல் நடந்து, அலகாபாத் நீதீமன்றத்தால் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அது கடந்த 15 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் மேல் விசாரணையில் கிடப்பில் இருக்கிறது. இந்துக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம். அயோத்தியில் இராமர் ஆலயம் அமைக்க மத்திய அரசு சட்டம் இயற்றி, அதில் உள்ள இடர்பாடுகளை நீக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல், மத்திய அரசு இதில் உரிய நடவடிக்கை எடுத்து, அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்டமான ஆலயம் எழுப்பிட ஆவன செய்ய வேண்டும்! அதற்காகவே இந்தக் காவிக்கொடி ஆர்ப்பாட்டம்… என்றனர்.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

சென்னையைப் போன்று, தமிழகத்தின் வேறு சில இடங்களிலும் காவிக்கொடி ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி நடத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories