மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்… தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி!

edappadi palanisamy - 2026
File Picture

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  மேலும், இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

கஜா புயல் பற்றி பேசத் தொடங்கிய ஸ்டாலினை இடைமறித்தார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இப்போது, ”மேகதாது விவகாரம் பற்றி மட்டுமே பேச வேண்டும்” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து, மேகதாது விவகாரம் பற்றி மட்டுமே பேச சபாநாயகரும் வேண்டுகோள் விடுத்தார்.

இதை அடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 பேர் கொண்ட குழுவில், மாநிலத்தின் சார்பில் உறுப்பினர் யாரும் இல்லை; இன்று வரை நிரந்தர உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று கூறினார் மு.க.ஸ்டாலின்.

மேலும்,  தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடையும் வகையில் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது, இது காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு வரும் நீரை குறைக்கும் வகையில் கர்நாடக அரசு அணை கட்டுகிறது என்று கூறிய ஸ்டாலின், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழகம் சார்பில் முழுநேர உறுப்பினர்கள் இல்லை  என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

முழுநேர தலைவரை நியமிக்காமல் ஆணையத்தை கிடப்பில் போட்டுள்ளதன் உள்நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது என்றும்,  மாநில அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது; தமிழக எம்.எல்.ஏ.க்களை அழைத்துச்சென்று பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும் என்றும் யோசனை கூறினார் ஸ்டாலின்!

தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத்தை நாளையும் நீட்டிக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும், கஜா புயல் சேதம் பற்றி விவாதிக்க சட்டப் பேரவை கூட்டத்தை நாளையும் நடத்த வேண்டும் என்றார்.

இந்நிலையில்,  ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்று கூறி தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், காவிரியில் புதிய அணை கட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கர்நாடக அரசு சட்டத்துக்கு புறம்பாக அணை கட்டுவது நியாயமில்லை என்றார்.

காவிரியில் கர்நாடக அரசு ஒரு அணை கட்டுகிறதா?, 2 அணை கட்டுகிறதா? என்று கேள்வி எழுப்பினார் துரைமுருகன்! மேலும், கர்நாடகா அரசு நம்மை ஏமாற்ற பார்க்கிறார்கள், எந்த இடத்திலும் அணை கட்டக்கூடாது என்பதை நாம் வலியுறுத்த வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கர்நாடக அரசு 2 அணைகள் கட்ட அப்போது அனுமதி கோரியது, அந்த அணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சி செய்துவருகிறார்கள், இதற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories