ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் மறைவுக்கு முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது இரங்கலை தெரிவித்து உள்ளார்.
முப்தி முகமது சயீத் உயிரிழந்தார் என்ற பயங்கரமான செய்தியை தற்போது கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் வருத்தப் பட்டேன். அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும். இந்தக் கஷ்டமான நேரத்தில் சயீத் அவர்களின் மனைவி, மகள் மற்றும் குடும்பத்துக்கு என்னுடைய இதய பூர்வமான அனுதாபங்களை தெரிவிக்கின்றேன். அவர்களுக்காக நானும் என் குடும்பமும் பிரார்த்தனை செய்கிறோம்.
– இவ்வாறு ஒமர் அப்துல்லா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
My heart felt sympathies to Mrs Syed, Mehbooba & the entire family in this most difficult of times. My & my family’s prayers are with them.
— Omar Abdullah (@abdullah_omar) January 7, 2016



