விமான நிலைய அதிகாரியை தாக்கிய பாராளுமன்ற உறுப்பினர் கைது

 
விமான நிலைய அதிகாரியை தாக்கிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டி சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.
 
ஆந்திர மாநிலம் ராஜம்பேட் பாராளுமன்ற தொகுதியில் இருந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மிதுன் ரெட்டி. இவர் தனது ஆதரவாளர்களுடன் கடந்த நவம்பர் மாதம் 26-ந்தேதி திருப்பதி சென்றார்.
 
அப்போது திருப்பதி விமான நிலையத்தில் பணியில் இருந்த ஏர் இந்தியா நிறுவன அதிகாரியுடன் ஏற்பட்ட தகராறில், பாராளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டி அந்த அதிகாரியை தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக மிதுன்ரெட்டி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் மதுசூதன் ரெட்டி உள்பட 19 பேர் மீது ஆந்திர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மிதுன் ரெட்டி எம்.பி.யின் உதவியாளர் முன்ஜாமீன் பெற்றார். ஆனால் முக்கிய குற்றவாளியான மிதுன் ரெட்டியும், மதுசூதன் ரெட்டியும் தலைமறைவாகி விட்டனர்.
 
இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்த மிதுன் ரெட்டி, முன்ஜாமீன் கேட்டு ஆந்திர நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை ஐகோர்ட்டு கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்ய காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்கிடையே அவர் தாய்லாந்துக்கு சென்றிருந்தார். எனவே அவர் நாடு திரும்பும் போது கைது செய்யும் நோக்கில் உள்துறை அமைச்சகம் மூலமாக அனைத்து விமான நிலையங்களுக்கும் அறிவிப்பு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை 1 மணிக்கு வந்த விமானத்தில், பாராளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டி மற்றும் மதுசூதன் ரெட்டி ஆகியோர் வந்து இறங்கினர். இதை கண்டுபிடித்த குடிமைத்துறை அதிகாரிகள், இருவரையும் பிடித்து வைத்து ஆந்திர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆந்திர காவல் துறையினர் சென்னைக்கு வந்து இருவரையும் கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
பாராளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டி மற்றும் மதுசூதன் ரெட்டி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பதி நோக்கி கண்டன பேரணி நடத்தினர். அவர் களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெளூரு பகுதியில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
 
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories