சென்னை மாவட்டத்தில் 39.47 லட்சம் வாக்காளர்கள் : இறுதி பட்டியல் வெளியீடு

 
சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், 39 லட்சத்து, 47 ஆயிரத்து, 16 பேர் இடம் பெற்றுஉள்ளனர்.
 
கடந்த ஆண்டு செப்., 15ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 38 லட்சத்து, 28 ஆயிரத்து, 773 வாக்காளர்கள் சென்னையில் இருந்தனர். அதன் பின் நடந்த பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான சுருக்கமுறை திருத்தத்தில், 2,538 பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 781 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக செப்டம்பரில் வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் இருந்ததை விட தற்போது, ஒரு லட்சத்து, 18 ஆயிரத்து, 243 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இது, 3.09 சதவீதம் அதிகமாகும். புதிதாக சேர்க்கப்பட்டவர்களில், 18 வயது பூர்த்தியானவர்கள் மட்டும், 32 ஆயிரத்து, 208 பேர் உள்ளனர்.
 
அதில், ஆண்கள், 19 லட்சத்து, 62 ஆயிரத்து, 414 பேர், பெண்கள், 19 லட்சத்து 83, ஆயிரத்து, 766 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள், 836 பேர் அடக்கம். வேளச்சேரி தொகுதியில் அதிகபட்சமாக, 2 லட்சத்து, 96 ஆயிரத்து, 329 பேரும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து, 82 ஆயிரத்து, 820 பேரும் இடம் பெற்றுஉள்ளனர். புதிய வாக்காளர்களுக்கு வரும், 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் முதல் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
.
இந்த வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங் களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. மேலும் www.elections.tn.gov.in என்ற இணைய தளத்திலும் பார்க்கலாம்.
ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Topics

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories