தீவிரவாதியை காவலில் இருந்து தப்பவிட்ட தமிழக காவல் துறையினர் !

 
வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஆம்பூரில் காவல் துறையினர் ஒரு வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வாலிபர் திரிபுரா மாநிலம் உன்னிகுட்டி மாவட்டம் கைலாஸ்கர் பகுதியை சேர்ந்த சையது இமாம் அலியின் மகன் சையது முகமது அலி (39) என்பது தெரியவந்தது.
 
இவன் டெல்லி, மும்பை உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதும், தீவிரவாதிகளுடன் அவனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தீவிரவாதி சையது முகமது அலி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டான்.
 
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் மருத்துவமனை ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக அங்குள்ள நீதிமன்றத்தில் தீவிரவாதி சையது முகமது அலியை நேரில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதன்படி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சையது முகமது அலியை, ஆயுதபடை காவல் ஆய்வாளர் லூர்து சாமி தலைமையிலான துப்பாக்கி ஏந்திய 6 காவலர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லக்னோவுக்கு ரெயிலில் அழைத்து சென்றனர்.
 
மத்திய பிரதேச மாநிலம் இட்டார்சி ரெயில் நிலையத்தை நேற்றிரவு ரெயில் சென்றடைந்தது. அப்போது ரெயிலில் காவலரின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்த தீவிரவாதி சையது முகமது அலி திடீரென தப்பி சென்றான். தீவிரவாதியை காணாமல் அதிர்ச்சியடைந்த காவலர்கள் ரெயில் நிலையம் முழுவதும் தீவிரமாக தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவன் பிடிபடவில்லை. மத்திய பிரதேச இட்டார்சி காவல் நிலையத்தினர் உதவியுடன் தமிழக காவல் துறையினர் தீவிரவாதியை பிடிக்கும் பணியை தீவிர படுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Topics

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Entertainment News

Popular Categories