பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள் கவர்கள்… திருப்பி அனுப்ப தமிழக அரசு திட்டம்!

plastics - 2026

சென்னை: அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை கொண்ட பிளாஸ்டிக் கவர்களை தொடர்புடைய நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு தீர்வு காணும் வகையில் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் தவிர பிளாஸ்டிக்கால் ஆன தாள்கள், பைகள், தட்டுகள், டீ கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், கைப்பைகள் உள்ளிட்ட 14 பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.
ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்தத் தடை உத்தரவு தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

தடை அமல்படுத்தப் பட்டுள்ளதால், பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், இருப்பு வைத்தல், விற்பனை செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள்,. தனிப்படை அதிகாரிகள் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பெரு நிறுவனங்களின் பிஸ்கட், நூடுல்ஸ், நொறுக்குத்தீனி கவர்களுக்கு தடை இல்லை எனவும், சிறு குறு நிறுவன தயாரிப்புகளின் பிளாஸ்டிக் தயாரிப்புகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டன. இந்த அரசு, பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும், சிறு வியாபாரிகளுக்கு பாதகமாகவும் செயல்படுவதாக, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் சிலர் குற்றம் சாட்டி செய்தி பரப்பினர்.

இந்நிலையில், தமிழக அரசு இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளது. அதன்படி, அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை கொண்ட பிளாஸ்டிக் கவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே திருப்பி அனுப்ப திட்டம் இருப்பதாகக் கூறியுள்ளது. மேலும், பெரு நிறுவன பொருட்களின் கவர்களை சேகரிக்க மாவட்டந்தோறும், மையங்கள் அமைக்கவும் அரசு பரிசீலித்து வருவதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories