கல்வித் துறை ஊழலால் 3 மாணவிகள் உயிர் பறிபோயுள்ளது: அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை:

கல்வித்துறையில் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்து ஆடுவதால், 3 மாணவிகளின் உயிர் பறிபோய் இருக்கிறது. ஜெயலலிதா அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

விழுப்புரம் மாவட்டம்- சின்னசேலம் அருகில் பங்காரத்தில் இயங்கி வந்த இயற்கை மற்றும் சித்த மருத்துவக்கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை செய்துகொண்ட துயர நிகழ்ச்சி அதிர்ச்சி அளிக்கிறது.

எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரியில் உரிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும் விதிமுறைகள் பின்பற்றப்படாததாலும் இக்கல்லூரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டது. திருவாரூரைச் சேர்ந்த பிரியங்கா, சென்னை எர்ணாñரைச் சேர்ந்த மோனிஷா, காஞ்சிபுரம் செய்யூரைச் சேர்ந்த சரண்யா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தலா 2 இலட்சம் ரூபாய் அளித்துவிட்டு, இந்தக் கல்லூரியில் இயற்கை மற்றும் சித்த மருத்துவம் பயின்று வந்தனர். இரண்டாம் ஆண்டில் பயின்ற மாணவிகள் அடிப்படை வசதிகள் இன்றி, சரிவர செயல்படாத இக்கல்லூரி நிர்வாகம் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து காவல்துறையிடமும புகார் மனு அளித்தனர்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இதனையடுத்து மாணவிகளிடம் பெற்ற கட்டணத் தொகை மற்றும் சான்றிதழ்களை திருப்பி அளிக்குமாறு எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருக்கிறார். ஆனால், ஆட்சியரின் உத்தரவை ஏற்காமல், கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக இருந்தது.

பல்வேறு சிரமங்கள், குடும்பப் பொருளாதார சுமைகளுக்கு மத்தியில் இரண்டு இலட்சம் ரூபாய் செலுத்தி ஏமாற்றம் அடைந்த மாணவிகள் பிரியங்கா, மோனிஷா, சரண்யா மூவரும் ஒன்றாக கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கண்ட கனவுகள் ஒரு நொடியில் சிதைந்துவிட்டன. இந்தக் குடும்பங்களுக்கு எப்படி ஆறுதல் கூற முடியும்?

அடிப்படை வசதிகள் இல்லாமல் தொடங்கப்பட்ட இக்கல்லூரிக்கு அரசு அனுமதி வழங்கியது ஏன்?

கல்வித்துறையில் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்து ஆடுவதால், மூன்று மாணவிகளின் உயிர் பறிபோய் இருக்கிறது. ஜெயலலிதா அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

சின்னசேலம் பங்காரத்தில் செயல்பட்டு வரும் எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாணவிகளின் தற்கொலைக்குக் காரணமான கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories