மதுவிலக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மீது “ஷூ’ வீச்சு: இளைஞர் கைது

Published:

பாட்னா:

பீகர் முதல்வர் நிதிஷ் குமார் மீது செருப்பு வீசிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று தனது சொந்த ஊரான பக்தியார்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து, நிதிஷ் குமாரை நோக்கி ‘ஷூ’ ஒன்றை வீசினார். அது மேடை அருகில் விழுந்தது. திடீரென நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

அங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து முன்னேறி அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்த பி.கே.ராய் என்றும், ஏப்.1ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள பூரண மதுவிலக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை அடுத்து அவர் பக்தியார்பூர் காவல் நிலையத்துக்கு அந்த நபர் கொண்டு செல்லப்பட்டார்.

முன்னதாக, வரும் ஏப்.1ம் தேதி மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப் படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தார்.

ALSO READ:  மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

 

Related articles

Recent articles

spot_img