இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளித்தது தி.மு.க அரசுதான்: அன்புமணி விளக்கம்

சென்னை:
இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளித்தது மத்திய அரசல்ல… தி.மு.க அரசுதான் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே 3 மாணவிகளின் மர்மசாவுக்கு காரணமான எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரிக்கு அனுமதி அளித்தது யார்? என்பது தொடர்பாக அடிப்படை ஆதாரம் இல்லாத தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. அவை அனைத்துமே இயற்கை மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறைகள் பற்றி எதுவும் அறியாதவர்களால் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு புகார்கள் ஆகும். அவை கண்டிக்கத்தக்கவை.

புதிய மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்க வேண்டுமெனில் அந்த கல்லூரியை இந்திய மருத்துவக் குழு ஆய்வு செய்து மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் அக்கல்லூரிக்கு அனுமதி அளிப்பது குறித்து சுகாதார அமைச்சகம் முடிவு எடுக்கும். ஆயுர்வேதம், சித்தா, யுனானி போன்ற இந்திய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேன்டுமெனில் இந்திய மருத்துவத்துக்கான மத்தியக் குழுவும், ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்றால் ஹோமியோபதிக்கான மத்தியக் குழுவும் ஆய்வு செய்து ஆயுஷ் அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்கும். அதனடிப்படையில் அனுமதி அளிப்பது குறித்து அந்த அமைச்சகம் தீர்மானிக்கும். ஆனால், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரிகள் பெரிய அளவில் தொடங்கப்படவில்லை என்பதால் அவற்றை முறைப்படுத்த மத்திய அரசு இதுவரை எந்த அமைப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்த கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. தமிழக அரசிடம் ஆட்சேபனையின்மை சான்றிதழ் பெற்று கல்லூரியை தொடங்கலாம். அதன்பின் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் இணைப்பு நிலை (Affiliation) கோரி விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்தால் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். அதனடிப்படையில் இணைப்பு நிலை குறித்து பல்கலை. முடிவெடுக்கும்.

தமிழ்நாட்டில் சென்னையில் ஓர் அரசு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரியும், சேலம், கோவை, குலசேகரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் 4 தனியார் இயற்கை மருத்துவம் – யோகா கல்லூரிகளும் செயல்படுகின்றன. இவற்றில் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் கல்லூரி தவிர மீதமுள்ள 4 கல்லூரிகளுக்கும் 1996-2001 தி.மு.க. ஆட்சிக்காலத்திலும், கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு 2008 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியிலும் தான் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை இடங்கள் எத்தனை? என்பதை தீர்மானிப்பது, இந்த இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநில சுகாதார அமைச்சகத்திடம் உள்ளன. இதற்கும் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது அப்பாவி மாணவிகள் 3 பேரை பலி கொண்ட கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு நான் அனுமதி அளித்ததாக சிந்திக்கும் திறனற்ற சில தலைவர்கள் கூறுவதையும், அதை சரிபார்க்காமல் கூட சில ஊடகங்கள் செய்தி வெளியிடுவதும் முறையா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். ஆறாவது அறிவு உள்ள எவரும் இப்படி ஒரு அவதூறு புகாரை என் மீது சுமத்த மாட்டார்கள். பா.ம.க. மீதும், என் மீதும் பொருளற்ற பகை கொண்டுள்ள சிலரால் மட்டுமே இப்படி அவதூறு பரப்ப முடியும். இதன் பிறகாவது அவதூறு பரப்பியவர்கள் தங்கள் மனசாட்சியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

2008-ஆம் ஆண்டில் எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்ட போது தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி தான் நடைபெற்றது. எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பு சுகாதாரத்துறையும், இணைப்பு நிலை வழங்கப்படுவதற்கு முன் பல்கலைக்கழகமும் சம்பந்தப்பட்ட கல்லூரியில் அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்திருந்தால் அங்கு படித்த, படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்காது. எஸ்.வி.எஸ். கல்லூரியில் இப்போதே எந்த கட்டமைப்பு வசதியும் இல்லை எனும்போது 8 ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயமாக கட்டமைப்பு வசதிகள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படியென்றால் அந்த கல்லூரிக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கலைஞரும், நிழல் முதலமைச்சராக செயல்பட்ட மு.க. ஸ்டாலினும் தான் விளக்க வேண்டும்.

எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அளித்துள்ள தற்காலிக இணைப்பு நிலை ஓராண்டு மட்டுமே செல்லுபடியாகும். அதனால் ஒவ்வொரு ஆண்டும் அதை புதுப்பிக்க வேண்டும். முந்தைய தி.மு.க. ஆட்சியிலும், இப்போதைய அ.தி.மு.க. ஆட்சியிலும் பலமுறை இணைப்பு நிலை புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் கல்லூரியில் அடிப்படை வசதிகள் உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். முறைப்படி ஆய்வு செய்யப்பட்டிருந்தால் நிச்சயமாக கல்லூரிக்கு இணைப்பு நிலை புதுப்பிக்கப்பட்டிருக்க முடியாது. ஆனால், எவ்வாறு இணைப்பு நிலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்பது சுகாதார அமைச்சர்கள் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கே வெளிச்சம்.

அதுமட்டுமின்றி, முந்தைய ஆட்சியிலும், இப்போதைய ஆட்சியிலும் இந்த கல்லூரியின் குறைகள் குறித்து அரசுக்கும், பல்கலைக்கழகத்திற்கும் மாணவர்கள் தரப்பிலும், பெற்றோர் தரப்பிலும் பலமுறை புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றின் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில மாதங்களுக்கு முன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திய போது கூட மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு கல்லூரியில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனாலும், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மோசடி கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் எந்த சக்தி தடுத்தது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.

எந்தவித கட்டமைப்பு வசதியும் இல்லாத எஸ்.வி.ஆர் கல்லூரிக்கு அனுமதி அளித்த முந்தைய தி.மு.க. அரசும், அக்கல்லூரிக்கு கடந்த 5 ஆண்டுகளாக பாதுகாப்பு அளித்து வரும் அ.தி.மு.க. அரசும் தான் 3 மாணவிகளின் சாவுக்கு பொறுப்பேற்க வேண்டும். மோசடி கல்லூரிக்கு துணை போன அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் உடனடியாக வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories