இந்திய கொடியை வீட்டின் மேல் பறக்கவிட்டு சிறை தண்டனை பெற்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தனது ரசிகருக்கு, கோஹ்லி உதவ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலம் ஓகாரா மாவட்டத்தில், வசிக்கும் உமர் ட்ராஸ், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான நடந்த 2வது டி20 போட்டியில் கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தை பார்த்த உற்சாகத்தில் இந்திய தேசிக் கொடியை தனது வீட்டின் மேல் பறக்கவிட்டார். இதை தொடர்ந்து அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறை தண்டனை பெற்றுள்ள தனது ரசிகருக்கு கோலி உதவி செய்யப் போவதாக கூறப்படுகிறது.
இது பற்றி கோஹ்லியின் சகோதரர் விகாஸ் தெரிவித்தாவது:
சிறை தண்டனை பெற்றுள்ள ரசிகருக்கு உதவ, சரியான ஆட்களை சந்தித்து பாகிஸ்தான் அரசுடன் பேச்சு வார்தை நடத்த உள்ளோம் என்று கூறியுள்ளார்.


