இலங்கை சுதந்திர தினத்திற்கு முன்பு முன்னாள் அதிபர் ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அமைச்சர் ராஜித சேனாரட்ன சமீபத்தில் சமீபத்திய வெளியிட்ட தகவலில், இலங்கையின் சுதந்திர தினத்துக்கு முன்னர் ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கைது நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராகவேண்டும் என்று தனது சகோதரன் யோசிதவிடமும், தாயார் சிராந்தியிடம் ராஜபக்சே கூறியிருந்தாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிராந்தி ராஜபக்சேவை நாளை விசாரணை குழு முன்பு ஆஜராக உள்ளது குறிப்பிடத்தக்கது.


