December 6, 2025, 10:58 PM
25.6 C
Chennai

முறைகேடாக பெட்ரோல், டீசல் விற்பனை; கரூரில் ஒருவர் கைது

karur vangal petrol diesel - 2025

முறைகேடாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்த நபர் கைது செய்யப் பட்டுள்ளார். கரூர் வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

கரூர் வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி இன்று ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, தவளப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு நபர் கேன்களில் டீசல் கொண்டு செல்வதைப் பார்த்துள்ளார். உடனே அவர், அந்த நபரிடம் எங்கு டீசல் வாங்கி செல்கிறீர்கள் என்று விசாரித்தார். அப்போது அருகில் உள்ள பள்ளிபாளையம் பிரிவு சாலையில் உள்ள தோட்டத்தில் ஒருவரிடமிருந்து டீசல் பெற்றுச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த நபரை அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு விரைந்தார் சரவணமூர்த்தி. அங்கே ஒரு தென்னந்தோப்பினுள் முறைகேடாக டீசல் மற்றும் பெட்ரோல் விற்றுக்கொண்டிருந்த புஞ்சை தோட்டக்குறிச்சியை சேர்ந்த கொடிஅரசு (47), த.பெ.ராஜா என்பவரை விசாரித்ததில், அந்த நபர் முறைகேடாக பெட்ரோல் டீசல் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து உரிய அனுமதி இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பெட்ரோல் டீசல் விற்று வருவது குறித்து, காவல் துறை அலுவலர்களுக்கும், குடிமைப் பொருள் வழங்கும் தரக் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெட்ரோல் டீசல் விற்பனை செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் 120 லிட்டர் டீசல் மற்றும் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலி கேன்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இதை அடுத்து வாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், குடிமைப்பணி பொருள் வழங்கும் தரக்கட்டுப்பாட்டு பிரிவின் சார்பு ஆய்வாளர் சையது அலி ஆகியோர் கொடிஅரசு மீது வழக்கு பதிவு செய்து பொருட்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories