மும்பை கிர்காவ் கடற்கரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று அனுமதி அளித்தது. இந்நிகழ்ச்சி வருகிற 13-ம் தேதி தொடங்குகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. இத்திட்டத்தை மேற்கொண்டு பிரபலப்படுத்தவும், மராட்டியத்தில் முதலீட்டை ஊக்குவிக்கவும், ‘மேக் இன் இந்தியா வாரம்’ என்ற நிகழ்ச்சி மும்பை கிர்காவ் கடற்கரையில் வருகிற 13 முதல் 18-ம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
6 நாட்கள் நடைபெறும் இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளிநாட்டு பிரதமர்கள், பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என 600–க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கில் முகாந்திரம் இருப்பதை அறிந்த நீதிபதிகள், கிர்காவ் கடற்கரையில் நிகழ்ச்சிகள் நடத்த மும்பை ஐகோர்ட்டு விதித்த தடையை நிறுத்தி வைத்தனர். மேலும், அங்கு பிரதமர் மோடி பங்கேற்கும் ‘மேக் இன் இந்தியா’ நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தனர்.


