கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் சோலார் பேணல் மோசடி வழக்கில் கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும், அந்நாளில் பிஜூ ராதாகிருஷ்ணன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்பின் நீதிமன்றம் விட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் சரிதா நாயர் தெரிவித்ததாவது, ”கேரள முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்யாடன் முஹம்மது ஆகியோரின் உதவியாளர்களிடம் ரூ.1 கோடியே 90 லட்சம் லஞ்சம் கொடுத்தேன். அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்னாள் மற்றும் தற்போதைய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., க்கள் என்னுடன் பேசிய ஆடியோ சிடிகளை வெளியிட உள்ளேன்.
உம்மன் சாண்டியுடன் நான் இருப்பது போன்ற ஆபாச வீடியோ பொய்யானது. என்னை மது ஆலை உரிமையாளர்கள் பின்னிருந்து இயக்குகின்றனர் என உம்மன்சாண்டி கூறுவது தவறு. என்னை யாரும் இயக்கவில்லை” என தெரிவித்தார்


