இன்று மு.க.அழகிரி தனது குடும்பத்தாருடன் விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு மு.க.அழகிரி பேட்டி அளித்தார். பத்திரிகையாளர்களை பார்த்து நீங்களாகவே கேள்வி கேட்கிறீர்கள். நீங்களாகவே அதற்கு பதில் போட்டுக்கொள்கிறீர்கள். நான் சொல்வதை போடுவதில்லை
என்று கோபமாக கூறினார்.
உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டர், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. திமுகவிலி ருந்து உங்கள் ஆதரவாளர்கள் விலக்கப்பட்டு இருக்கிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டனர். எனது ஆதரவாளர்களை விலக்குவதாக இருந்தால் லட்சம் பேரை விலக்க வேண்டியதிருக்கும் என்று அவர் கூறினார்.
திமுகவில் சேருவீர்களா என்று கேட்டபோது, நான் சொல்வதை எல்லாம் போடுவீர்களா என்று திருப்பி கேட்டார்.உங்கள் நிலை என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இன்னும் 2 மாதங்களில் என் முடிவை அறிவிப்பேன் என்று மு.க.அழகிரி கூறிவிட்டு குடும்பத்தாருடன் காரில் புறப்பட்டுச் சென்றார்.


