சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீராங்கனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பிபா கிளாரி (Piepa Cleary) என்பவர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆண்கள் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக கிளாரிக்கு 6 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.


