பாரதீய ஜனதா கட்சியும் ஊழல் செய்யும் கட்சியே ! : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Published:

 
பாரதீய ஜனதா கட்சியும் ஊழல் செய்யும் கட்சி தான் .எந்த ஊழலும் செய்யாத கட்சி என அந்த கட்சியை கூற முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
பாரதீய ஜனதா கட்சி அரசில் ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூட கூற முடியாத நிலையில் காங்கிரஸ் தத்தளிப்பதாக மோடி கூறியுள்ளார். இதன்பின்னர், பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. இதற்கு, எந்தப் பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த குஜராத் முதலமைச்சர் ஆனந்திபென் படேலின் மகள் அனர் ஜெயேஷ் படேல் மிகப்பெரிய நிலப் பறிப்பு ஊழலில் சிக்கியுள்ளார். சிங்கங்களின் சரணாலயம் உள்ள பகுதியில் 400 ஏக்கர் அரசு நிலம் ஒரு சதுர அடி ரூ.1.50-க்கு அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
எனவே, பாரதீய ஜனதா கட்சி எந்த ஊழலையும் செய்யாத கட்சி என்று நரேந்திரமோடி கூறுவது போலித்தனமானது என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Related articles

Recent articles

spot_img