சென்னை:
தமிழக சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் அமைய உள்ள கூட்டணியால் ஊழலற்ற ஆட்சியை தர முடியும் என்று பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க., தலைவராக தமிழிசை சௌந்தர்ராஜன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், தலைவர் பதவிக்கு மீண்டும் என்னைத் தேர்ந்தெடுத்த தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் அமைய உள்ள கூட்டணியால் ஊழலற்ற ஆட்சியைத் தரமுடியும். தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளதால், கூட்டணி குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. தேர்தல் பிரசாரத்தில், மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொள்வர் என்று கூறினார்.


