இந்துக்களுக்கு எதிராக நடக்கும் சதிக்கு எதிராக போரிட வேண்டும்: மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை

Published:

‘இந்துக்களுக்கு எதிராக சதி நடக்கிறது’ என பாரதீய ஜனதா கட்சியின்  மத்திய அமைச்சர் ராம் சங்கர் கதாரியாவும், பாஜ எம்பி பாபு லாலும் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்களால் கொல்லப்பட்ட விஎச்பி தலைவர் அருண் மஹருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் கூட்டம் கடந்த ஞாயிறு அன்று நடந்தது. இதில் பேசிய மத்திய அமைச்சர் ராம் சங்கர் கதாரியா, ‘இந்து சமூகத்துக்கு எதிராக சதி நடக்கிறது. நாம் எச்சரிக்கையாக வேண்டும். இதை எதிர்த்து போரிடாவிட்டால் இன்று ஒரு அருண், நாளை மற்றொரு அருண் என நடக்கும்’ என்று கூறியுள்ளார். 

Related articles

Recent articles

spot_img