இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில் தேர்தல் நடத்த தயார்: ராஜேஷ் லக்கானி

Published:

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில், சட்டமன்றத் தேர்தல் நடத்த தயார் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள், வாக்களிப்பதன் அவசியம், வாக்களிக்கும் முறை குறித்து நாடக வடிவில் செய்முறை விளக்கம் காண்பித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில், தமிழக சட்டமன்றத் தேர்தலை நடத்த தயார் எனவும், தமிழக தேர்தலுக்காக சமூக வலைதளங்களில் தீவிரமாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களை விட தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைவாக உள்ளதாகவும் லக்கானி குறிப்பிட்டார்.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

Related articles

Recent articles

spot_img