கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு தாக்கல் செய்ய பட்டுள்ளது.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் முதல் மனுவாக ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு பெறப்பட்டது.
ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாநிலங்களில் ஏதேனும் ஒரு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் ராகுல் பெயரில் விருப்பமனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.


