இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

pon radhakrishnan - 2026

கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தனி தேர்தல் அறிக்கை தயார் செய்து வெளியிடப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளது. பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இக்கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியவையே அந்த தொகுதிகள். அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை பா.ஜனதா வேட்பாளர் தேர்வு குழு மேற்கொண்டது.

இந்த பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

184 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலை பா.ஜனதா மூத்த தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களும் இடம்பெற்று இருந்தன.

அதன்படி, தூத்துக்குடி தொகுதியில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

கடந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மீண்டும் அதே தொகுதியில் களம் காண்கிறார்.

கோவை தொகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிறுத்தப்பட்டுள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.

மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories