புது தில்லி: ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிந்தும், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டும் நான் என் பேச்சைத் தொடர்ந்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவார். மேலும், விவசாயி தற்கொலை தொடர்பாகத் தாம் பேசியதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். இது குறித்து அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்… ஆம் ஆத்மி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதும் நான் உடனே பேரணியை ரத்து செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது நான் செய்த தவறு. விவசாயி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று என்னிடம் தகவல் கூறப்பட்டும் நான் என் பேச்சைத் தொடர்ந்திருக்கக் கூடாது. அப்படி நான் நடந்து கொண்டது யார் மனதையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விவசாயி தற்கொலை குறித்து தில்லி போலீசார் நடத்தி வரும் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராகவுள்ளேன். இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி தொண்டர்களை குறை கூறுவது தவறு. தில்லி போலீசார் என்னை அழைத்தால், தேவைப்பட்டால் அவர்கள் முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பேன். தில்லி போலீசார் இந்த விஷயத்தில் நேர்மையான, பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும். விவசாயி கஜேந்திரசிங் தற்கொலை விவகாரத்தில் உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்கள் போலீஸ்காரர்களாக இருந்தாலும் சரி, ஆம்ஆத்மி தொண்டர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். தில்லியில் மாநில அரசும் மாஜிஸ்திரேட் மூலம் தனி விசாரணை நடத்துகிறது. கஜேந்திரசிங் தற்கொலையை அரசியலாக்குவதை விட்டுவிட்டு, விவசாயிகளுக்கு பயிர் சேதத்துக்கு எத்தகைய கூடுதல் இழப்பீடு கொடுக்கலாம் என்று ஆலோசனை நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்றார்.
Hot this week
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

