சென்னை: ஓ காதல் கண்மணி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் மணிரத்னத்தின் மனைவி என்ற முறையில் சுஹாசினியும் கலந்து கொண்டார். அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை… இணையத்தில் திரை விமர்சனம் எழுதுகிறவர்களை ஒரு பிடி பிடித்தார். ஒரு படத்தை விமர்சிக்கிற தகுதி பத்திரிகையாளர்களுக்கு மட்டும்தான் உண்டு. ஆனால், சோஷியல் மீடியாவில் மவுசை நகர்த்தத் தெரிந்தவர்கள் எல்லாம் விமர்சனம் எழுதுகிறார்கள். இதை பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தடுக்க வேண்டும். விமர்சனம் எழுதுகிற தகுதியும் உரிமையும் உங்களுக்குதான் உண்டு என்றார். ஆனால், மணிரத்னமோ, முன்பு டீக்கடையில் படத்தைப் பற்றி விமர்சனம் செய்தார்கள். நானும், பி.சி.ஸ்ரீராமும்கூட குட்டிச் சுவரில் உட்கார்ந்து, யாருக்குமே படம் எடுக்க தெரியலை என்று விமர்சித்திருக்கிறோம். இப்போது மக்களுக்கு ஒரு தளம் கிடைத்திருக்கிறது. அதில் அவர்கள் தங்களின் கருத்தைக் கூறுகிறார்கள். அதைத் தடுக்க முடியாது என்று பேசினார்.
மவுஸ் பிடித்தவரெல்லாம் சினிமா விமர்சனம்: ‘ஓகே கண்மணி’யில் ஓகே ஆகாத சுஹாசினி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari