இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் முதல்வர்: கருணாநிதி பேட்டி

“இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்’ என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு கருணாநிதி, செவ்வாய்க்கிழமை பேட்டி அளித்தார். அப்போது, “திமுகவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற விருப்பம் உள்ளதே?’ என்று கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில்:

முதல்வராக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை. திமுக தலைவரான நான்தான் முதல்வராக வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

1957-இல் தொடங்கி இதுவரை நான் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோற்றது இல்லை. இந்த முறை வென்றால் 6-வது முறையாக முதல்வராவேன்.
அப்படி 6-ஆவது முறையாக நான் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறவர்களில் முதல் ஆள் மு.க. ஸ்டாலின்தான் என்றார் கருணாநிதி.

அதைத் தொடர்ந்து, “மு.க. ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பவர்களுக்கு என்ன சொல்வீர்கள்?’ என்ற கேள்விக்கு, “அவர் முதல்வராவதற்கு வாய்ப்பு வரவேண்டுமானால் எனக்கு இயற்கையாக ஏதேனும் நேர்ந்தால்தான்’ என்றார் கருணாநிதி.

அவர் மேலும் கூறியதாவது:
இலவசம் பயன் அளிக்காது: அதிமுக தேர்தல் அறிக்கையின் இலவச திட்ட அறிவிப்பு பயனற்றது. இது மக்களை ஏமாற்றும் செயலாகும். திமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுக நகலெடுத்து வெளியிட்டுள்ளது. பண பலத்தால் வெற்றி பெற அதிமுக திட்டமிட்டுள்ளது. அந்தக் கனவு பலிக்காது. தமிழகத்தில் 3-ஆவது அணியை நம்புவது எந்த விதத்திலும் பலனளிக்காது. 3-ஆவது அணிக்கு மக்கள் வாய்ப்பு அளித்தனர். ஆனால் அது தற்போது பல துண்டுகளாகிவிட்டன.

ஜெயலலிதா பொய் பிரசாரம் செய்து வருகிறார். தமிழன்னைக்கு ரூ.100 கோடி செலவில் சிலை அமைக்கப்படும் எனக் கூறினார். ஆனால், அது அமைக்கப்படவில்லை. ஊழல் தலைவர்களை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்று வந்தவர். அவருக்கு எதிரான திமுகவின் பிரசாரம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது என்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories