தற்குறிகள் மூஞ்சியில் கரியைப் பூசிவிட்டது மழை! தமிழகம் ஆன்மிக பூமியே!

hraja veeramani - 2026

யாகம் செய்தால் மழை வருமா என்றனர் தற்குறிகள்; அவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் மழை பெய்து வருகிறது என்று கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

அவர் தனது டிவிட்டர் பதிவில், கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்தால் மழை வருமா என்றனர் தற்குறிகள். தமிழகம் முழுவதும் பூஜைகள் தொடங்கியுள்ளன. சேலம், வேலூர், திருச்சி, திருப்பூர், அவிநாசி, மதுரை, சென்னையில் பட்டாபிராம் என்று மழை பெய்து வருகிறது. தமிழகம் மீண்டும் ஆன்மிக பூமி ஆகட்டும். வளம் பெறுவோம்… என்று கூறியிருக்கிறார்.

மழை தண்ணீர் இல்லாமல் வறட்சி தாண்டவமாடியதால், அறநிலையத்துறையின் முக்கியமான கோயில்களில் இசை மீட்டு, வருண ஜபம் செய்து, மழைக்காக பிரார்த்தனைகள் செய்யுமாறு அறநிலையத்துறை ஆணையர் கூறியிருந்தார். இதனை தி.க.வினர் கேலி கிண்டல் செய்து, மிகப் பெரும் குற்றம் போல் பிரசாரம் செய்தனர்.

இந்நிலையில் அவர்களின் பகுத்தறிவுக்கு விடை சொல்வது போல், மழைக்கான சூழல் உருவாகியுள்ளது. வடக்கு தமிழகத்தில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்பு மையமும் தெரிவித்தது. அதன்படி தற்போது தமிழகம் மற்றும் சென்னையில் பல இடங்களில் பலத்த காற்றுடம் மழை பெய்து வருகிறது. இதனை மக்கள் மகிழ்ச்சியுடன் சமூக வலைத் தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

திருவள்ளூர், தருமபுரி, மதுரை மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. ஆங்காங்கே மின்னலுடன் இடியும் இடிக்கிறது.

நேற்று முதல் திருப்பூர், நாமக்கல், தேனியில் நல்ல மழை பெய்து வருகிறது. தமிழகம் மட்டும் இல்லாமல் கர்நாடகாவிலும் மழை பெய்து வருகிறது. பெங்களூருவில் பல இடங்களில் பலத்த மழையும், சூறைக்காற்றும் வீசி வருகிறது.

இந்த வருடம் வெயில் கடுமையாக இருப்பதால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இரவு பகலாக தண்ணீர் லாரிகளில் தண்ணீர் குடங்களுடன் மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்தான் மழைக்கான பிரார்த்தனைகள் கோயில்களில் முன்வைக்கப் பட்டன. அதற்கு ஏற்ப மழை பெய்வதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனைக் கேள்வியாகக் கேட்டுள்ள ஹெச்.ராஜா, தமிழகம் ஆன்மிக பூமி என்று கூறியுள்ளார்.

அதே நேரம், வானிலை ஆய்வு மையம் மழை பெய்யும் என்று கூறிய நிலையில் வருண ஜபம் செய்யச் சொல்லியிருப்பதாக தி.க.வினர் அடுத்த பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories