December 6, 2025, 4:20 AM
24.9 C
Chennai

ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விவகாரம்: உச்ச நீதிமன்றம் ஆளுநரிடம் தள்ளிவிட… ஆளுநர் மத்திய அரசிடம் தள்ளிவிட..

7per viduthalai - 2025
ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில், ஆளுநர் முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூற, ஆளுநரோ மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்திருக்கிறார்.

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என ராஜீவ் குண்டுவைத்துக் கொல்லப்பட்ட நிகழ்வில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

ராஜீவ் படுகொலை தொடர்பில் சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிமன்றம், ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யும் உரிமை ஆளுநருக்கு மட்டுமே உண்டு; அவர் மட்டுமே இந்த வழக்கில் தீர்மானிக்கும் உரிமை பெற்றவர் என்று குறிப்பிட்டது.

இதனிடையே, ராஜீவ் படுகொலை தொடர்பில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை எதிர்த்து அந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு கொடுத்த உரிமையை மேற்கோள் காட்டி, குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவு எடுப்பார். இதில் இனி நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவுவெடுக்கும் உரிமை ஆளுநருக்கு மட்டுமே உண்டு என்பதை நீதிபதிகள் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

ஆளுநரின் கையொப்பம் இருந்தால் மட்டுமே ஏழு பேரின் விடுதலை சாத்தியமாகும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பது மீண்டும் உறுதி செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாகப் பேசிய பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் இதில் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது. 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய ஆளுநர் கையொப்பம் இட வேண்டும் என்றார்.

இருப்பினும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆளுநரால் முடிவெடுக்க முடியாது! ஆளுநருக்கு இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசின் ஒப்புதல் அவசியம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories