ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விவகாரம்: உச்ச நீதிமன்றம் ஆளுநரிடம் தள்ளிவிட… ஆளுநர் மத்திய அரசிடம் தள்ளிவிட..

7per viduthalai - 2026
ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில், ஆளுநர் முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூற, ஆளுநரோ மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்திருக்கிறார்.

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என ராஜீவ் குண்டுவைத்துக் கொல்லப்பட்ட நிகழ்வில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

ராஜீவ் படுகொலை தொடர்பில் சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிமன்றம், ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யும் உரிமை ஆளுநருக்கு மட்டுமே உண்டு; அவர் மட்டுமே இந்த வழக்கில் தீர்மானிக்கும் உரிமை பெற்றவர் என்று குறிப்பிட்டது.

இதனிடையே, ராஜீவ் படுகொலை தொடர்பில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை எதிர்த்து அந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு கொடுத்த உரிமையை மேற்கோள் காட்டி, குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவு எடுப்பார். இதில் இனி நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவுவெடுக்கும் உரிமை ஆளுநருக்கு மட்டுமே உண்டு என்பதை நீதிபதிகள் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

ஆளுநரின் கையொப்பம் இருந்தால் மட்டுமே ஏழு பேரின் விடுதலை சாத்தியமாகும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பது மீண்டும் உறுதி செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாகப் பேசிய பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் இதில் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது. 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய ஆளுநர் கையொப்பம் இட வேண்டும் என்றார்.

இருப்பினும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆளுநரால் முடிவெடுக்க முடியாது! ஆளுநருக்கு இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசின் ஒப்புதல் அவசியம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories