எவரெஸ்ட் சிகரத்திலிருந்து 5000 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் கூடாரங்கள் அமைக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள், உணவு பொட்டலங்களின் கழிவுகள், உடை என 25 டன்களுக்கும் மேல் குப்பைகள் குவிந்துள்ளன.
இந்த குப்பைகளை அப்புறப்படுத்த கடந்த 14ஆம் தேதி எவரெஸ்ட் தூய்மை திட்டம் தொடங்கப்பட்டது. வரும் 29ஆம் தேதி வரை தூய்மைப் பணிகள் நடைபெற உள்ள நிலையில், 5,000 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப் படுத்தப் பட்டுள்ளன.