நாமக்கல் மாவட்டத்தில் பச்சிளங் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் சேலம் எஸ்.கொல்லப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலிய உதவியாளயாக பணிபுரிந்து வந்த சாந்தி என்பவர் இன்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் குழந்தை விற்பனை தொடர்பாக சுகாதார துறையினர் செய்த கள ஆய்வு விபரங்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Published:

