உத்தரவை மதிக்காத மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

supreme court of india - 2026

நீதிமன்ற உத்தரவை மேற்குவங்க அரசு மதிக்காததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது!

பாஜக இளைஞரணி நிர்வாகி பிரியங்கா ஷர்மாவை நேற்று முன்தினம் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், மேற்கு வங்க மாநில அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் நேற்று காலைதான் பிரியங்கா சர்மாவை சிறையிலிருந்து விடுவித்தது. இதற்கு உச்சநீதிமன்றம் மேற்கு வங்கத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக யுவ மோர்ச்சா அமைப்பில் நிர்வாகியாக இருப்பவர் பிரியங்கா சர்மா. இவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கேலியாக சித்தரிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். இதற்கு திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்

இந்நிலையில் பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பிரியங்கா சர்மாவை ஜாமீனில் விடுவிக்க கோரி அவரது சகோதரர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்mamta banarjee priyanka chopra image - 2026

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரியங்கா சர்மாவுக்கு ஜாமீன் வழங்கினார் மேலும் அவர் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நேற்று முன்தினம் கூறியிருந்தனர் ஆனால் பிரியங்கா சர்மா உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் விடுவிக்கப்படவில்லை

இந்நிலையில் அவரது சகோதரர் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து ஒரு மனு தாக்கல் செய்தார் இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணைக்கு வந்தது

அப்போது நீதிபதிகள் ஒரு உத்தரவை பிறப்பித்தனர் பிரியங்கா சர்மா முதல் கட்ட தகவல் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவரை நேற்று முன்தினம் விடுவிக்காமல் நேற்று காலைதான் விடுவித்தனர். அதை ஏன் மேற்கு வங்க அரசின் இந்த செயல் கண்டனத்துக்குரியது என்று நீதிபதிகள் கூறினர்

இதற்கிடையே சிறையில் இருந்து நேற்று ஜாமீனில் வெளியான வெளி வந்த பிரியங்கா சர்மா செய்தியாளர்களிடம் பேசிய போது, நடந்தவை குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் சிறையில் என்னை கடுமையாக துன்புறுத்தினர். ஒரு குற்றவாளியைப் போல என்னை நடத்தினர் இதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் என்று கூறினார்.priyanka sharma - 2026

பிரியங்கா ஷர்மா ஜாமினில் வெளிவந்த பின்னர் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த மன்னிப்பானது அவரது செயலுக்காக தானே தவிர ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனை அல்ல என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது.

எனவே பிரியங்கா ஷர்மா தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் மன்னிப்புக் கோரப் போவதில்லை என்று தெளிவாக கூறியிருந்தார்! அவரது கருத்துக்கு டிவிட்டர் பதிவுகளில் ஆதரவு அதிகம் காணப் பட்டது. எனவே பிரியங்கா ஷர்மா தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் மன்னிப்புக் கோரப் போவதில்லை என்று தெளிவாக கூறியிருந்தார்! அவரது கருத்துக்கு டிவிட்டர் பதிவுகளில் ஆதரவு அதிகம் காணப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories